ASTROLOGE

ASTROLOGE

19 May 2011

சிம்மம் பொதுபலன்


சிம்மலக்னத்தில் பிறந்த ஜாதகர்கள், மதிநுட்பம் வாய்ந்த இந்தியப் பழங்கால வானசாஸ்திரங்களின் கற்பனைப்படி சிம்மத்தின் குணம், நடை, பாவனை, தோற்றம், கம்பீரப் பார்வை முதலியவற்றைப் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் பெற்றிருப்பர். உடல் சிறிது பருமனாகவும், உடலுக்கேற்ற உயரமும், கழுத்து உடலுக்கேற்றவாறு பருத்தும் உருண்ட முகமும், கனிந்த பார்வையும் பெற்றிருப்பார்கள். திரண்ட முகமும், கனிந்த பார்வையும் பெற்றிருப்பார்கள். திரண்ட புஜங்களும், பரந்தமார்பும் கொண்டு கம்பீரமாகத் தோன்றிடுவர். பிறரிடத்தில் சரளமாகப் பேசும் இவர். கோபம் கொள்ளும்போது நாக்கை மடித்துக் கொள்வர். இவர்கள் பேசும்போது கண்களும் கைகளும் அசைந்து கொண்டே இவர்கள் என்ன சொல்லப் போகிறார் என்ற கருத்தினை உடனுக்குடனேயே வெளிப்படுத்தும். இவர்களுக்கு மார்பில் ஏதாவதொரு தழும்பும், இருதய பாகத்தில் மச்சமும் இருக்கும். மார்பின் கீழும், தொப்புளுக்கு மேலும் மூன்று மடிப்புகளாகக் காணப்படும். கைகள் குட்டையாகவும், பாதங்கள் அகன்றும், நிற்கும்போது பூமியில் படிந்தும் காணப்படும். சிலருக்கு நெற்றியில் இருகோடுகள் தென்படும். முகத்தில் ரோமம் அடர்த்தியாகக் காணப்படும். இவர்களுக்கு செவி சற்று மந்தமாக இருக்கும். கண்ணின் மேல் இமையானது சற்று மூடியிருக்கும்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள், சிம்மம் எப்படி மற்ற மிருகங்களைக் காட்டிலும் தைரியமுடையதாகவும், வீரமுடையதாகவும் விளங்குகிறதோ, அதுபோலவே, அஞ்சாநெஞ்சம் கொண்டு இருக்கும் இடத்திலிருந்தே பிறர் அஞ்சும்படியான சுபாவம் படைத்தவர்களாக இருப்பார்கள். அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வபக்தியும், தருமகுணமும் கொண்டவர்கள். சூது-வாது அறியாதவகர்கள். எல்லாரையும் நம்பக்கூடியவர்கள். எனவே இவர்களைச்சுற்றி உறவினர்-நண்பர் கூட்டம் இருந்து முகஸ்துதி செய்து கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு எதிரில் இவரது நண்பர்கள் உறவினர்கள் மனம் குளிரப் பேசினாலும், இவர்களின் பின்னால் இவரைத் தூற்றிக் கொண்டிருப்பார்கள். ஆனால் யார் எதைச் சொன்னாலும் கருத்தில் கொள்ளாது விடா முயற்சியால் பல சாதனைகளைப் புரிந்து காட்டுவார்கள். வீரம் நிறைந்து அமைதியுடன் தோற்றமறித்தாலும், இவர்கள் வம்புச்சண்டைக்குப் போக மாட்டார்கள். ஆனால் வந்த சண்டையை விடமாட்டார்கள். பிறருடைய நலனைப் பெரிதும் விரும்பும் தியாக உள்ளம் படைத்தவர்கள். நீதி நேர்மைக்கு அடிபணிந்து சட்டத்தை மதித்து மனசாட்சியின்படி நடக்கும் இவர்களிடம் வஞ்சனை, சூது முதலியவற்றைக் காண்பதரிது.

இவர்கள் ராஜதந்திரத்தைக் கையாள்பவர்கள். ஆதலால் மற்றவர்கள் தந்திரம் இவர்களிடம் பலிக்காது. தாராள மனப்பான்மை, பெருந்தன்மை, படைத்தவரானாலும், முன் கோபியாக இருப்பர். அற்ப விஷயங்களுக்காக முதலில் கோபம் கொண்டாலும் பின் சிந்தித்துப் பார்த்து வருத்தம் கொள்வார்கள். தாம் செய்தது தவறு என்று அறிந்து கொண்டால் அத்தவறுக்காக வருந்தி மன்னிப்பு கேட்கும் இயல்பு கொண்டவர்கள். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் நியாயம் தவறாதவர்கள். நமது மனசாட்சியையே சட்டமாகக் கொண்டு அதன்படி நியாயத்தை நிலைநாட்டவும் செய்வார்கள். இவர்களது இந்தப் போக்குச் சிலருக்கு நியாயமாகத் தோன்றினாலும் பலருக்கு அநியாயமாக தோற்றமளிக்கும். உயர்ந்த எண்ணமும் நோக்கமும் கொண்ட இவர்கள் பிறர் மெச்சும்படியாக காரியங்களை சாதித்துக் காட்டுவார்கள். இதனால் வாழ்க்கையில் பலமுறை தோல்வி பெற்றாலும் இறுதி வெற்றி இவர்களுடையதே யாகும். இவர்கள் யதார்த்தவாதிகள் ஆனதாலும், எந்தக் காரியத்தையும் துணிந்து செய்வதாலும் வெகுஜன விரோதமும், இவருடைய போக்கில் எதிர்ப்புகளும் அதிகம் ஏற்படும். வயது, அனுபவம் அந்தஸ்து இவற்றுக்கேற்றபடி இவர்களிடம் நன்னடத்தையும் உதாரகுணமும், பெருந்தன்மையும் பரந்த நோக்கமும் காணப்படும். அளவுக்கு மீறிய அன்பும் பாசமும் பெற்றவரானாலும் சிறுமைக் குணங்களும் அவ்வப்போது தலை தூக்கிக் காட்டும், பெரிய தவறுகளை சுலபமாக மன்னித்து விடும் இவர்கள் அற்ப விஷயங்களை பிரமாதமாக்கி விடுவார்கள்.

இவர்களில் சிலர் தகாத செயல்களில் ஈடுபடுவதும் உண்டு. எதிர்ப்பை வெற்றி கொண்டு தனக்கு இழுக்கு நேர்ந்தாலும், சந்தோஷம் அடையும் சுபாவம் படைத்தவர்கள். அன்ன ஆகார விஷயங்களில் உயர்ந்த பண்டங்களைப் புசிக்கும் இவர்கள் தண்ணீர் நிறைய அருந்துவார்கள். சிலர் விலையுயர்ந்த பானங்களையும், மது வகைகளையும் விரும்பிக் குடிப்பதும் உண்டு. இவர்களுக்கு ஜலராசியான கடகம் விரயஸ்தானமாக அமைந்ததால் பிரயாணத்தில் அடிக்கடி மழையில் நனைவதும் உண்டு.

தங்களுடைய பலம் குறைந்த போதிலும், திறமை சாமர்த்தியமும் இவற்றால் எந்தக் காரியமானாலும், தனித்து நின்றுபோராடி பல இன்னல்களுக்கிடையே வெற்றியை சாதித்துக் கொள்ளுபவர்கள் இந்தலக்னத்தில் பிறந்தவர்கள். தனக்கு இடையூறு செய்பவர்களை வேரோடு களைந்த பிறகுதான் நிம்மதி அடைவார்கள். தற்பெருமை கொண்டவர்களானாலும் தனக்கு நிகரில்லாதவரிடத்தில் சரிசமமாகப் பழகமாட்டார்கள். மன்னிப்புக் கோருகிறவர்களை கண்ணியமாக மன்னிக்கும் சுபாவம் கொண்டவர்கள். வாழ்க்கையில் எந்த வித இன்னல்கள் ஏற்பட்டாலும் மனமகிழ்ச்சியுடனே காணப்படுவார்கள்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் தங்களது வாக்கு சாதுரியத்தினாலும், ராஜ தந்திரத்தாலும் பெரிய அதிகாரிகளிடத்தும் கணவான்களிடத்தும் செல்வாக்குப் பெற்று விளங்கிடுவார்கள். மேற்பார்வையிடுதலும் பிறரை அடக்கி ஆள்வதிலும் திறமையும் விருப்பமும் கொண்ட இவர்கள் சிறு தொழில்களிலோ பிறர்க்கு அடிமையாகவோ வேலை செய்ய விரும்பமாட்டார்கள். இவர்களை எதிர்த்துப் பேசியவர்கள் இவர்களது சொல்லுக்கு கட்டுபடாவிட்டால் பலர் முன்பு பெருத்த அவமானத்துக்குள்ளாக நேரிடும்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அநேகமாக பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் சுயேச்சையை விரும்புவதால் மற்றவர்களின் கட்டுதிட்டங்களுக்கு அடங்காது. தனித்து வாழ வேண்டுமென்ற விருப்பம் கொண்டு தனியாக குடும்பம் நடத்துவர். இந்த அமைப்பு இவர்களுக்கு பெரும்பாலும் திருமணத்துக்குப் பின் ஏற்படும். அதிகம் சகோதரர் சகோதரிகளைப் பெற்று அவர்களுடைய அன்பும் ஆதரவும் கு¬றாயமல் பெற்றிருப்பார்கள். ஆனால் இவர்களுடைய அன்பும் ஆதரவும் பெற்ற சகோதர-சகோதரிகள் இவர்களைப் போற்றுவதற்கு பதில் தூற்றுவார்கள். தனித்து வாழ்ந்தாலும் மற்றவர்களை ஆதரிக்கும் பொறுப்பிலிருந்து நழுவாமல் கடமைகளைத் தவறாது செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் சிறியவர்களாயினும், பெரியவர்களைப் போன்று குடும்பத்தில் நடக்க வேண்டிய சுபகாரியங்களை முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு, கடன் பெற்றாவது, முடித்துக் காட்டுவார்கள்.

இந்ல லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வருமானம் ஒரே சீராக இருந்து கொண்டிருக்கும். செலவு செய்ய வேண்டிய தருணத்தில் தேவைக் கேற்றவாறு எவ்விதத்திலாவது பணவசதியைப் பெற்று தாராளமாக செலவு செய்திடுவார்கள். உயர்தரப் பொருள்களையே விருபும் இவர்கள் விலையைப் பற்றி அதிகம் கவலைப்படமாட்டார்கள் உழைத்து ஊதியம் பெறுவது ஒருவாறு இருந்தாலும், நேர்மை, புத்தி சாதுரியம், திறமை இவற்றைக் கொண்டு குறுக்கு வழிகளிலும், எளிய முறைகளிலும், தேவைக்கேற்றவாறு துரித காலத்தில் பணம் சம்பாதிக்கும் ஆற்றல் படைத்தவர்கள். ஆனால், எவ்வளவு சீக்கிரத்தில் ஆற்றல் படைத்தவர்கள். ஆனால் எவ்வளவு சீக்கிரத்தில் சம்பாதித்தாலும் அவ்வளவு சீக்கிரத்திலேயே செலவு புரியவும் தயங்கமாட்டார்கள். கடன் இருந்தாலும் இவர்களுக்கு தொந்தரவளிக்காது.

இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அனேகமாக தாயின் சுகம் கிடைப்பதில்லை. தாயினால் அடிக்கடி கண்டிக்கப்படுவதாக இருந்தாலும் இவர்கள் அவற்றைப் பொருட்படுத்த மாட்டார்கள். இவர்களுக்கு சிறுவயதிலேயே தகப்பனாரின் ஆதரவும் குறைந்துவிடும். இவர்களுடைய சுயேச்சையான செயல்களும் அபிப்ராயங்களுமே இவர்களது பெற்றோரின் அன்பும், ஆதரவும், பாசமும் குறைவதற்குக் காரணமாகும்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுகத்தையும் அமைதியையும் அனுபவிக்க விருப்பமிருப்பினும், இவர்களுடைய செயல்களாலேயே அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். பிதுரார்ஜித சொத்துக்கள் இருப்பினும் அவற்றினை சகோதர-சகோதரிகளுக்கு விட்டுக் கொடுத்து சுயமாக பூமி-விடு முதலிய புது சொத்துக்களை அமைத்துக்கொள்வார்கள். ஆயினும் சொத்து சம்பந்தமாக சிறு சிறு வழக்குகளும் ஏற்பட்டு நீதிமன்றம் அல்லது மத்தியஸ்தம் இவற்றில் ஈடுபட்டு வெற்றியும் பெறுவார்கள்.

இளமைப் பருவத்திலிருந்தே புத்திகூர்மையுடையவராதலால் எதையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் சக்தியும் பெற்றவர்கள். இளமை மாறியதும், மாறுபட்ட சூழ்நிலையின் காரணமாக கருத்துகள் மாறியும் எதிர்ப்புத் தன்மையும் ஆணவமும் தோன்றிடும். கல்வி கற்க பூரண ஆர்வமிருப்பினும் வசதிக்குறைவு காரணத்தால் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வது கடினம். ஒரு சிலர் சட்டம், மருத்துவம், பொறியியல் ஆகியவற்றில் பயிற்சி பெற்று திறமைசாலிகளாகவும் விளங்கிடுவார்கள்.

இவர்களுக்கு ஆண்பிள்ளைகளே அதிகம் பிறக்கக் கூடும். ஒரு சிலருக்கு ஏராளமான சொத்து முதலியன ஏற்பட்டு புத்திர சந்ததி இல்லாமல் தத்து எடுத்துக்கொள்ளவும் நேரிடும். முன்யோசனை அதிகம் பெற்ற இவர்களின் யோசனையை நாடி பலர் பயன் பெறுவார்கள். ஆண்டவன் கருணை இவர்களுக்கு பரிபூரணமாக ஏற்படுவதால் இவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டிய நிலை ஏற்படாது.

இவர்கள் வாய்வு சரீரம் பெற்றவர்கள். உஷ்ணமான தேகத்தைக் கொண்டவர்களானாலும், நாளடைவில் வயிற்றுக் கோளாறு, முழங்கால் பிடிப்பு போன்ற வாய்வு சம்பந்தமான வியாதிகள் ஏற்படும். கிழங்கு வகைகளை நீக்கி, கீரை வகைகளை சேர்த்துக் கொண்டு மலச்சிக்கல் ஏற்படா வண்ணம் பாதுகாத்துக் கொள்வது அவசியம். வாரத்திற்கு இருமுறை நல்லெண்ணெய் ஸ்நானம் செய்து வந்தால், சர்ம வியாதிகள் ஏற்படாமல் தடுக்கும். இவர்களுடைய அதிக உழைப்பும் நோய்க்கு ஒரு காரணமாகும்.

இவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவதொரு கவலை ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். கடன்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் அவற்றைப் பற்றிய கவலை வாட்டிடும். உணர்ச்சி வசப்பட்டு திடீர் கோபம் கொள்வதாலும், கவலைகளாலும், இரத்தக் கொதிப்பு, இருதயக்கோளாறு முதலிய நோய்கள் தோன்றிவிடலாம். கடன்களுக்கு வட்டி செலுத்திக் கொண்டு வந்தால் நோய்-நொடிகள ஏதும் ஏற்படாது. இல்லையெனில் வழக்கு வியாஜ்யங்களில் ஈடுபடநேரிடும்.

பொதுவாகவே, சிம்ம லக்கனங்ககாரர்களுக்கு திருமண வாழ்க்கை திருப்திகாரமாக அமைவிதில்லை. திருமணத்திற்கு பின் குடும்பத்தில் கவலைகள் அதிகமாகும். இவருக்கு வாய்கும் மனைவி அதிக செலவாளியாக ஏற்படக் காரணமாகிறது. இவர்களை அனுசரித்து இவர்களுடன் ஒத்துழைக்கும் மனைவி வாய்ப்பதும் கடினமாகும். அனேகமாக இவர்களுக்கு வாய்க்கும் மனைவி சொந்தத்தில் அல்லாமல் அந்நியத்தில் ஏற்படுவாள்.

இவர்கள் தர்ம சிந்தனையும், தெய்வபக்தியும் நிரம்பியவர்கள். இவர்களுடைய உதார குணத்தையும் பெருந்தன்மையையும் பிறர் பயன்படுத்திக் கொள்வார்கள். தர்மஸ்தாபனங்களை சிலர் ஸ்தாபிப்பார்கள். தூரதேசப் பிரயாணங்களில் விருப்பம் கொண்டவர்கள். சிலர் உலகநாடெங்கிலும் சுற்றுப் பிரயாணமும் செய்திடுவார்கள். மெய்ஞானம், தத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபட்டு பலர் போதித் தத்துவங்களை நக்கு பரிசீலித்து வேண்டியதை மட்டும் திரட்டி எடுத்துக் கொள்வார்கள். ஆசாரியர்களிடம் அளவு கடந்த பக்தி, விசுவாசம் நிரம்பியர்வளாக இருப்பார்கள்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் தற்காலிகமான எந்தத் தொழிலையும் நாடாது நிரந்தரமான தொழிலை ஏற்று நடத்தி அதிக லாபம் பெற விரும்புவார்கள். அரசாங்க ஆதரவுகளும், செல்வர்களின் தொடர்பையும் அடிக்கடி ஏற்படுத்திக்கொண்டு தொழிலில் வெற்றி பெறுவார்கள். இவர்களால் காரிய சாதனை பெற்றவர்கள் நன்றியறிதலில்லாமல் தாங்கள் பெற்ற உதவிகளை மறந்து செயலாற்றுவதைக் கண்டு மனம் வருந்துவர். சட்டமன்றங்களில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவது பெரும் பலனைத் தரும். சங்கீதம், கவிதை, தத்துவ ஆராய்ச்சி, பிரசங்கம் புரிதல், ஜோதிடம் ஆகிய தொழில்களில் இவர்களுக்கு பேரும், புகழும், கீர்த்தியும் ஏற்படும். இவர் ஏற்றுக்கொள்ளும் தொழில்கள் தாமே சுயமாக சாதிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். காட்டில் விளையும் பொருள்கள், காட்டிலாகா, வைத்தியம், அரசாங்கப் பணிகள், மூலிகை, மருந்துகள், உணவுதானியங்கள், சர்க்கரை, வெல்லம், தோல் வியாபாரம் ஆகிய இந்த தொழில்களிலும் நல்ல ஆதாயங்கள் ஏற்படும். இந்த ஜாதகர்களில் சிலர் பிறர் மூலதனத்தைக் கொண்டும், பிறர் மூலப் பொருள்களைக் கொண்டும் தன் பேச்சு சாமர்த்தியத்தினால் நல்ல ஆதாயம் பெற்றிடுவர். இவர்கள் திறமை வாய்ந்த கமிஷன் ஏஜெண்டுகள் என்றால் மிகையாகாது.

இவர்கள் அதிக நேரம் தூங்குவது கடினம். அதிக நேரம் விழிப்புடன் இருப்பார்கள். தனிமையில் பேரின்பம் பெற விருப்பப்பட்டாலும், இவர்களது கூட்டாளிகளோ அல்லது நண்பர்களோ ஓய்வு நேரத்தைப் பகிர்ந்து கொள்வதால் ஓய்வு பெறுவதும் கடினம்.

பிராயணங்களில் விருப்பமுடைய இவர்கள் அடிக்கடி வெளியூர் பிரயாணங்களில் ஈடுபட்டாலும் நீண்ட நாள்கள் தங்கமாட்டார்கள். எங்கு சென்றாலும் இருப்பிடத்தை வந்தடைவார்கள்.

இவர்கள் அரசியல் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டால் நற்பலன்கள் நிச்சயமாக உண்டு. இவர்கள் தொழிலாளிகளானால் வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் முன்னுக்கு வரமுடியும். உத்தியோகஸ்தர்களானால் எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். கலை ஆர்வமுள்ளவர்களால் கலைத்துறையில் நல்ல பெயர் எடுக்கலாம். ஆனால், பணம் அவ்வளவு லேசில் பெறமுடியாது.

ஒரு சமயம் நடிகர் வி.கே. ராமசாமி அவர்களின் ஜாதகம் பார்க்க நேர்ந்தது. அவர் சிம்ம லக்ன ஜாதகர்தான். இந்த லக்னக்காரர்களுக்கே உரித்தான பொதுவான குணங்கள் எல்லாம் பொருந்தியிருக்கக் கண்டோம். மிகமிக நல்லவர். தனக்கென்று ஒரு பகுதி அவர் பங்களாவில் அமைத்துக்கொண்டு இருக்கிறார். கலைத்தொழிலில் ஈடுபட்டவராகையால் பண விஷயத்தில் நாம் சொல்லியது போல் சிக்கல்கள்தான் இருக்கச் செய்கிறது. தனக்குக் கொடுக்க வேண்டியவர்கள் சரியாகக் கொடுப்பதில்லையே என்று குறைபட்டுக் கொள்கிறார் பாவம்! பெரும்பாலான கலைத்தொழிலில் ஈடுபட்ட சிம்ம லக்னக்காரர்களுக்கு இந்தக் குறை இல்லாமலில்லை.

இனி, இந்த லக்னத்தில் பிறந்த மாதர்களைப்பற்றி பார்க்கலாம்.

இந்த லக்னத்தில் தோன்றிய மாதர்கள் கம்பீரமான தோற்றமுடையவர்களாக இருப்பார்கள். ஆண்களுக்குரிய தைரியம், வீரம், சாகசம், பராக்கிரமம், துணிச்சல், அஞ்சாமை, நிமிர்ந்து நடக்கும் சுபாவம், அதிகாரதோரணை, யாவரும் தமக்குப் பணிந்து நடக்கவேண்டும் என்ற மமதை முதலிய அம்சங்கள் நிறைந்து காணப்படுவார்கள். பெண்களுக்கு பிரதானமாக விளங்க வேண்டிய அச்சம், மடம், நாணம் முதலியவற்றை இவர்கள் வெளிக்குப் பிரதானமாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். தாம் ஈடுபடும் ஒவ்வொரு காரியத்திலும் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக செயல்புரிந்து காட்டுவார்கள்.

அந்தஸ்து, கௌரவம், பட்டம், படிப்பு, செல்வாக்கு முதலியவற்றை மிக அக்கறையுடன் பாதுகாத்துக்கொள்வார்கள். தாம் பிறந்த குடும்பத்திலானாலும் அல்லது புகுந்த வீட்டிலானாலும் சகலவித அதிகாரத்துடன் வாழ்க்கையை நடத்திக்காட்டுவார்கள். வயதில் சிறியவர்களாயினும் பெரியோர்களும் இவர்களுக்குத் தகுந்த மரியாதை காட்டி நடத்துவார்கள்.

அகம்பாவம் படைத்தவர்களாயினும் பெருந்தன்மையுடனும் தாராள மனப்பான்மையுடனும் நடந்துகொள்வார்கள். அற்ப விஷயங்களை எல்லாம் பிரமாதப்படுத்தாமல் விட்டுக்கொடுக்கும் உயர்ந்த பண்புடையவர்கள். பெரியவர்களிடத்தில் அன்பும் மரியாதையும், மதிப்பும் மிக்கவர்கள். தவறுகள் செய்பவரை தாட்சண்யம் பாராது கண்டிப்பார்கள். அடித்துப் பேசும் ஆற்றல் படைத்த இவர்கள் பிறருக்காக வாதாடுவதும் உண்டு. எந்த இடத்திலும் முதன்மை ஸ்தானத்தையே பெற விரும்புவார்கள்.,

செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்தாலும், உயர்ந்த ஆடையாபரணங்களையும் படாடோபங்களையும் விரும்பாது எளிய தோற்றமடையவர்கள். உயர்ரகமான சாப்பாட்டு வகைகளையே விரும்புவார்கள். பிடிவாத குணமுடைய இவர்களை மாற்றுவது கடினம். எக்காரியத்திலும் இறுதிவரை போராடி வெற்றிபெறும் ஆற்றல் கொண்டவர்கள். பொறுப்பான காரியங்களை நேர்மையுடன் செய்து முடிப்பார்கள். கேளிக்கை, விநோதம், கண்காட்சி, சுற்றுலா முதலியவற்றில் விருப்பம் கொண்டவர்கள். தற்பெருமைக்காரர்கள் ஆனதால் இவர்களை முகஸ்துதி செய்தே பலர் தங்களது காரியங்களை சாதித்துக் கொள்வார்கள்.

இவர்களுக்கு காலம் கடந்து திருமணம் ஏற்படும். சிறுவயதில் திருமணமானால் கவலை நிறைந்த வாழ்க்கையாகத் தோன்றும். குழந்தைகளிடத்தில் அதிக ஆசை கொண்டுள்ள இவர்களுக்கு குழந்தைகள் அதிகம் ஏற்படாது. மற்றவர்களுடைய குழந்தைகளை வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள். நவீன நாகரிக முறைகளைக் கையாளும் இவர்கள் மூடப்பழக்க வழக்கங்களில் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.

என்னில் உள்ளது