ASTROLOGE

ASTROLOGE

08 February 2014

லக்னம் பற்றிய ஆய்வின் முடிவு

          லக்னம் பற்றிய இறுதியான முடிவு.
லக்னம் என்பது பிரசன்னலக்னம், ஆரூடலக்னம், உதையலக்னம்,ஜென்மலக்னம்,கடிகைலக்னம் பார்சூணாலக்னம் இந்துலக்னம் ஒராலக்னம்,தாராலக்னம் அம்சலக்னம் என்று பலகணிதம் உள்ளது இதில் இருந்து லக்னம் என்பது ஒரு செயலின் தொடக்கம் அல்லது ஆதாரபுள்ளி என்று மட்டும் உணரலாம் ..நாம் ஆராய்வது ஜென்ம லக்னம் ....ஒரு சிசு தாயின் வயிற்றில் கருவாக உறுவாகி 10 மாதம் தன் தாயின் பிராணனை உட்கொண்டு வளர்கின்றது அது கனிந்து சுயம் என்கின்ற முடிவான நிலையே அடையும் போது பிறவி என்கின்ற சூழல் உருவாகு கின்றது அது தன் தாய்வயிற்றில் இருந்து வெளி வந்ததும் தயின் தொடர்பு விட்டு போவதில்லை..எப்போது அந்த தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டு முடிச்சி போடப்படுகின்றதோ அப்போது தாயில் இருந்து கிடைத்த மூச்சின் ஒருபகுதி சிசுவின் உள் கும்பகமாக செயல்பட்டு அது தன் சுவாச உருப்பு திரந்து பிரபஞ்ச பிராணனுடன் தொடர்பு கொள்கின்றது அப்போது நம் உள் ஒரு சிரு வெற்றிடம் உண்டாகின்றது அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு வெளியில் உள்ள பிராணன் உள் சொன்று அந்த இடத்தை பூரணம் மாக்கு கின்றது இதுதான் லக்னம். முதல் பிராண அசைவு அல்லது உண்ரவு இது தான் லக்னம்..அந்த உணர்வில் ஒலி தோன்றி அதில் ஒளி தோன்றி நாதம் மாக சப்தசுரம் மாக காலம் தோன்று கின்றது உடனே சுரத்தின் மூலம் பூதம் வந்து அதிலே வாழ்கை ஆரம்பிக்கும் புள்ளி என்ற நான் உருவாகுகின்றது..இது எப்படி ராசி கட்டத்தில் குறிப்பிடுவது..அதன் நேரம் எப்படி கணிப்புக்கு உள் படுத்துவது ஒரு ஜாதகம் எழுதியபின் குறிப்பிட்ட.இந்த நபர் ஜாதகம் தான் என்பதை எந்த காரணிகளை கொண்டு உறுதிப்படுத்துவது.....மேலும் விரிவாகப்பார்போம் அதற்கு முன் ராசி என்பது என்ன என்பதை பற்றி அடுத்த பதிவில் பார்போம்.....லக்னம் பற்றி ஆன்மீகரீதியில் தத்துவரீதியிலும் சொல்லவேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம் நம் ஆராய்ச்சி ஜோதிடத்தில் லக்னம் என்பதை பற்றியதாக இருப்பதால் இந்துடன் முடித்துக்கொல்கிறேன் நன்றி வணக்கம்



03 February 2014

லக்னம் பற்றிய முடிவான கருத்து-1



லக்னம் பற்றிய முடிவான கருத்து-1
தகப்பன் என்கின்ற ஆணும் தாய் என்கின்ற பெண்ணும் கருவுருவாவதற்கு முக்கிய காரணிகள்......இந்த இரண்டும் நம் உடலில் வளராமலும் தேயாமலும் மாறாமலும்  இரண்டாக தோன்றினாலும் ஒன்றாக அதாவது அர்த்தநாதீஷ்வர் வடிவில் சொயல்பட்டு வருகின்றது....அதாவது மாதா,பிதா,குரு,தெய்வம் ..இதன் விளக்கம் இங்கு தேவை இல்லை நான் இனி வியாக்கியானமாக எழுதாமல் தத்துவமாக விளக்குகின்றேன் ....இது தூலமாகவும் சூட்சமுமாகவும் இருக்கின்றது ..கட்புலன் வடிவமைக்கு இந்த உடல் காரணம் வரைபடம்  நம் உள் இருக்க அதன் வெளிபாடுதான் உடல்....அப்படி பார்கும் போது நம் உடலில் அர்தநாதீஷ்வர் என்பது நம் கண்கள் .....கண் அல்ல கண்கள்...அதாவது வலது கண் சூரியனாகவும் ...தகப்பனாகவும் இடது கண் சந்திரனாகவும்  தாய்யாகவும் நின்று எனக்கு உலகை உணர்து கின்றது..அதவாது கோது என்கின்ற காலம் ராகு என்கின்ற மாயை திரையே  பின்னி அதன் உள்ளும்  சுற்றிவருகின்றது  அங்கு என் தந்தையும் தாயும் செய்யும் லீலை தான் இந்த  உலகம்.   மாறு கின்ற ஒரு பொருளை உணர்த்த மாறாத ஒரு பொருள் நமக்கு தேவை  அதை இந்த உடலாக பார்கும் போது கண்மணி தான் மாறதா பொருள்  ....இது நாம் பிறக்கும் போது எப்படி இருந்த்தோ அப்படியே இறக்கும் போதும் இருக்கும் அது வளராமல் மாறாமல் நம் உலக காட்ச்சிக்கு அசையாமல் சாட்சியாக இருக்கும்  அது இரண்டாக இருக்கும் ஆனால் ஒன்றாக காட்சி கொடுக்கும் இப்படி அதை விவரித்துக்கொண்டே இருக்லாம் ..அதை பற்றி பின்பு பார்போம் இதில் சில பேர் கோட்கலாம் கண் இல்லாதவர் உலகில் வாளவில்லையா என்று  இதை படித்தும் புரியாத மடையமாறுக்குதான் அந்த கேள்வி வரும் அப்படி பட்டவர்கள் இனி மேலும் தயவு செய்து இதை படிக்கவேண்டாம்.....இந்த கண்மணியின் கட்டமைப்பு ஆதாரம் அதாவது  சூட்சும ரகசியம் தான் லக்னம்......இதை எப்படி ஜென்ம லக்னமாக ஜாத கட்டத்தில் உண்ர்வது ..ஒரு சினிமா தியாட்டரில் உள்ள புரஜக்டரில் படத்தின் பிலீம் பொருத்தப்பட்டு இருக்கும் அதன் முன்பு லென்ஸ் அமைக்கபிபட்டு  வெளியில் திரை போடப்பட்டு இருக்கும் புரஜெக்டரின் உள் ஒரு ஒளி மிக்க பல்பும் பொருத்தப்பட்டு இருக்கும் இது எல்லோறும் அறிந்த்தே...இது தான் கரு உருவாகுதலின் ரகசியம் எல்லாம் சரியாக பொருத்தினாலும் திரையில் படம் தெரியாது......அங்கு என்ன செய்யவேண்டும் சுச்சு போடவேண்டும் மின்சாரம் சென்று அந்த பவர் மிக்க பல்பு முதலில் எரியவேண்டும் அது அசையாமல் இருக்கவேண்டும் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ என்ன அற்புதம் உடனே வணக்கம் என்ற தொடக்கம் திரையில் தோன்ற ஆரம்பிக்கும் இந்த திரைதான் ராகு ஒளி மிக்க பல்பு கேது .....இந்த இரண்டையும் இணைக்கும் புள்ளி மின்சாரம் லக்னம் ....இது என் அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதும் அதற்கு பெயர் மின்சாரம் தான் இப்போதும் அதற்கு பெயர் மின்சாரம் தான் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ இன்னும் பார்போம்... தத்துவமாக ...இனி எதிர் வேள்வி கேளுங்கள் அப்போதுதான் அதன் ரகசியம் வெளிபடும் இவ்வளவு  லக்னம் பற்றிய பதிவும் உங்களுக்கு உணர்த்தவே இனி உங்கள் சந்தேகங்களே கேளுங்கள் பதில் சொல்லபடும்  ...இன்னும் புரிதல் என்பது நான் தேடி கொண்டுதான் இருக்கிறேன்  உங்களோடு...நன்றி.

01 February 2014

கேதுவின் ரகசியம்



                     கேது

கேது என்பதன் ரகசியத்தை லக்ன ஆராய்ச்சி முடிந்தவுடன் எழுதலாம் என்று இருந்தேன் ஒரு தோழரின் தேடுதலுக்கு வலுசேர்க்க இங்கு எழுத வேண்டிய நிர்பந்தமாகிவிட்டது.....
அன்பு சகோதர புஜியம் என்றால் ஒன்றும் இல்லை என்பது பொருளல்ல எல்லாம் தன் அகம் கொண்டது என்பதும் உண்டு அது மற்ற எண்ணுடன் சேறும் போதுதான் அதன் வலிமையே வெளி படுத்தும்.அதே போல் ஆதி மூலம் கணபதி தான் கேது இதில் இருந்துதான் பிர எல்லாம் சிவன் உள்பட  ஆகையால்தான் நட்சத்திரத்தில் முதலாவதாக கேது குறிப்பிட்பட்டுள்ளது என்பது என் எண்ணம்  ஏன் அதை மேஷம் முதலாக கொண்டார்கள் என்றால் கேது விதையின் ரகசியமாகவும் மேஷம் செவ்வாய் பூமியாகவும் கொண்டு உற்பத்தியின் தொடக்கத்தை 0 புள்ளியில் இருந்து தொடங்கி இருக்கலாம் மற்றும் கேது என்பது வடதுருவம் 0 புள்ளி ராகு என்பது தென்துருவம் அதாவது 180 டிகிரி...கொடுத்தல் என்பது கேது..... பெற்றுக்கொள்ளல் என்பது ராகு.... இந்த இரண்டுக்கும் இடைபட்ட சக்தி பறிமாற்றமே பூமியின் உற்பத்திக்கு காரணமாக இருக்கின்றது...உலகில் இருக்கும் தாது மூலம் ஜீவன் ஆகிய ஆனைத்துமே இதன் ஆளுமைக்கு உற்பட்டது ஆகையால் தான் இதை பாம்புக்கு உருவகப்படுத்தினார்கள்....இன்னும் இதன் ரகசியம் என்ன வென்றால் இது இயங்குவதற்கு ......ஆகாரம்....அதாரம்.... காலம்.....இப்படி பல ரகசியங்கள் உள்ளன....மலையே மத்தாகவும் பாம்பை கயிராகவும் கொண்டதன் நோக்கம் ....கேது லிங்கம் மாகவும் ராகு ஆவுடையாகவும் இருந்து சிவலிங்கம் தோன்றிய வரலாறு ஆஹா ஆஹா அற்புத படைப்பு....இவை நான் படித்தல்ல உணர்ந்த்து தயவு செய்து இதற்கு ஆதாரம் எதாவது இருக்கின்றதா என்று என்னிடம் கேட்க வேண்டாம் அதற்கு இல்லை என்பது தான் பதில் படித்து உணர்ந்து பாருங்கள் காலபுருஷன் ரகசியம் தெரியும்..நன்றி குற்றம் இருந்தால் எச்சிலை உமிழ்ந்து செல்லவும் நன்றி. அசுவதி நட்சத்திரத்தை முதலாவதாக கொண்டதன் காரணம் இது வாக இருக்கலாம் என்பது என் கணிப்பு ....

குழந்தைக்கு பெயர் அமைப்பது யார்.....


பெயர்,அழகு,இன்பம்,பிணி,மூப்பு,சாக்காடு, இந்த ஆறும் கருவில் அமைத்தப்படியே.....என்பதுதான் சாஸ்திரம். கருஉருவாக காரணமாக இருப்பவர்கள் பெற்றோர்கள் அவர் உணர்வில் இருந்துதான் அனைத்தும் உற்பத்தி ஆகின்றது அவர்கள் உணர்வில் வரும் வார்த்தைகளே குழந்தைக்கு பெயராக மலரவேண்டும்.....அப்போதுதான் அது இயல்புஉண்ரவோடு வாழக் கற்றுக்கொள்ளும். நான் சிருவயதாக இருக்கும் போது சில முதியவர்கள் தவறு செய்தவர்களை திட்டுவார்கள் எப்படி என்றால் உனக்கு பெயர்வைத்தவன் எவன் என்று ஏழனமாக திட்டுவார்கள் அதன் பொருள் என்னவென்றால் நீ பிறக்க காரணம் மான அப்பா வேறு யாரோ எனற காரணம் ஆகும்.......இப்படி பெயர் தேர்ந்து எடுப்பதில் அப்பாவுக்கு உள்ள உரிமையே இப்போது ஜோதிடகள் 
வாங்கி உள்ளனர்......எடுத்து காட்டாக ஆயில்யம் நட்ச்சத்திரத்திற்கு எழுத்து -பு,டு,டே,டோ....என்பதாகும் இதில் நீங்கள் என்ன பெயரை வைக்க சொல்லமுடியும் ....டு....என்பது கொண்டு என்னபெயர்வைப்பது என்று திருதிருவென்று முழிக்கும் மக்களுக்கு அதில் தான் வைக்கவேண்டும் இல்லாவிட்டால் உங்கள் குழந்தைக்கு ஆயுள் குறைவு என்று பேமாரி தனத்தை காட்டும் ஜோதிடர்களுக்கு என்ன சொல்வது....இவ்வளவு தெழிவாக தமிழ் மொழிய உருவாக்கிய சித்தகாலபுருஷ்ன்மார்கள் பெயர் வைப்பது டு..டி..டே என்ற எழுத்தில் வைக்கவேண்டும் என்று ஒரு போதும் சாஸ்திரத்தில் சொன்னது இல்லை இனியாவது ஒரு புனித கர்மம் என்ற ஜோதிட தொழிலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் ....பெயர் ராசி,எண்கணிதம் பெயர்வைத்து பொருத்தம் பார்பது போன்ற பித்தலாட்ட செயலை விட்டு விட்டு ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கின்றதோ அதை கற்று சொல்வது நல்லது ,,,,,,நன்றி

ஜோதிடம் பற்றிய ஒரு கண்ணோட்டம்



    ஜோதிடம் பற்றி ஒரு கண்ணோட்டம்
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.
நம் முன்னோர்களாகிய முனிவர்கள் தங்களது தவ்வலிமையாலும். அறிவாற்றலாலும் வானின் கண் தோன்றியுள்ள சூரியன் முதலான கோள்களையும் அசுவதி முதலான நட்ச்சத்திரங்களையும் மேஷம் முதலான இராசிகளையும் மற்றும் பல கிரகங்களையும் ஆராய்ந்து சூரியனின் ஒளியே கொண்டு உத்தராயணம், தக்ஷ்ணாயனம் என்ற பாகுபாட்டையும்.வசந்தம் முதலான ருதுகளையும்,சித்திரை முதலான மாதங்களையும், வளர்பிறை தேய்பிறை என்ற இரு காலத்தையும்

நாள்,திதி,யோகம்,கரணம், போன்ற பஞ்சாங்கத்தையும்,அதன் காலஅளவையும் நிர்ணயித்து மேலும் வானஆராய்ச்சிக்கு உரிய நூட்பமான பல விஷயங்களையும் தங்களது கணிதஅறிவால் ஆராட்சி செய்து வானசாத்திரத்தை உருவாக்கினார்கள்.இந்த சாஸ்திரம் மூலம் மனிதவாழ்வின் வருங்கால இன்பதுன்பங்களை முன்கூட்டி அறிந்துக்கொள்ள பயன்படும் கலையே ஜோதிடக் கலையாகும்.
தாய் வயிற்றில் குழந்தை கருவாக உருவாகி வளர்ந்து இம்மண்ணுலகில் குழந்தை பிறக்கும் அதே தருணத்தில் வானில் உலவும் இதர ஒன்பது கோள்களின் நிலையே அடிப்படையாக்க் கொண்டு குழந்தையின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழப்போகும் யாவற்றையும் அறிந்துக்கொள்ளு உதவும் ஒர் கணிதகலையே ஜோதிடசாஸ்திரம்.
இப்பிறப்பில் மனிதன் ஒருவனுக்கு இறைவனால் தொகுத்தளிக்கப்பட்டுள்ள பிராராப்த்த பகுதியே அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்ற ஒர் அற்புதமான கணிதகலையே இது. ஆனால் இக்கலையின் பலித்த்திற்கு முக்கியமான நிபந்தனைகள் மூன்றுண்டு அவை.
1. குழந்தை பிறந்த தேதி,நேரம்,பிறந்தஇடம், இம்மூன்றும் இம்மியும் பிறழாதப்படி சரியாக நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.
2. ஜாதகத்தை பிழையின்றி கணித்து வரையும் திறமைஜோதிடர்க்கு இருக்கவேண்டும்.
3. ஜாதகப்பலனை கூறும் ஜோதிடர் கேட்கவந்தவரின் மனநிலையே புரிந்து அதற்கு தக்கவாறு முகஸ்துதி செய்து பணத்துக்கோ,புகழுக்கோ ஆசைபடும் துர்க்குணம் இல்லாதவராயும். இராசி மற்றும் கிரகத்தின் குண,பாவ,பலத்தை நன்குஉணர்ந்து குரு மொழியில் நம்பிக்கை கொண்டு அதன்மூலம் கிடைக்கும் உன்மையான அனுமானபலத்தை எடுத்துரைக்கும் வாக்கு வன்மையான ஜோதிடராக யிருக்கவேண்டும்.
இம் மூன்றில் ஒரு தகுதி இல்லாமல் போனாலுங்கூட ஜாதகபலன் தவறாகிவிடும்.
ஜோதிடம் என்பது ஒவ்வெறு தனி மனிதனின் வாழ்கையில் ஏற்படும் நிகழ்வுகளை இடம்,பொருள்,காலம்,நிமித்தம், போன்ற காரண காரியத்தின் மூலம் தெளிவாக அறியமுடியும்.
மனிதர்கள் எப்போதும் மனத்தால் தனக்கு தானே ஒரு கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றனர் அது என்னவென்றால்.நான் இதை இப்போது செய்யலாமா?,என் எண்ணம் நிறைவேறுமா?, என் எண்ணம் சரியா அல்லது தவறா?, நான் இதை எப்போது செய்யலாம்?, என் தேடுதல் ஆசை எப்பேது நடக்கும்?, நான் இந்த கஷ்டத்தில் இருந்து எப்போது விடுதலை அடைவேன்?. இது போன்ற கேள்விகள் மனித மனதில் எப்போதும் தோன்றிக் கொண்டேயிருக்கும். இந்த கேள்விக்கு தகுந்தபதிலை அறிவு பக்குவப்பட்ட மனிதர்கள் தனக்கு தானே தேடி வெற்றிக்கொள் கின்றனர் இவர்களுக்கு ஜோதிடமும்,ஜோதிட ஆலோசனையும் தோவையில்லாத ஒன்றுதான்.
ஆனால் பலவாறகாக சிந்தித்தும் அறிவு தெழிவுபெறாமல் கலக்கம் பெற்ற மனிதனுக்கு ஒரு அறிவுறை தேவைப்படுகிறது இவர்கழுக்குதான் ஜோதிட சாஸ்திரம் துனைபுரிகின்றது. இப்படி கலக்கம் பெற்று வரும் மனிதனுக்கு அவன் பிறவி ஜாதகத்தை தெழிவான முறையில் ஆராய்ச்சி பண்ணி அதன்மூலம் கிடைக்கும் கிரககுண பலன் களையும் அவன் பருவகால திசா பலனையும் உணர்ந்து அவன் அறிவுதெளியும் வரை போதிக்கவேண்டும் இதுவே ஒரு குரு மொழி உணர்ந்த ஜோதிடரின் கடமையாகும்..
இதுவல்லாமல் இன்றைய வியாபார விளம்பரத்திற்குவேண்டி ஜோதிடத்திற்கு சம்ந்தம் இல்லாத எண்கணிதம்,கையழுத்து ஜோதிடம்,பெயர்மாற்றுதல்,ஆவிகளோடு பேசுதல்,போன்ற ஏமாற்று கலையே பயன்படுத்தி அறிவு தெழிவுயில்லாமல் வரும் மனிதனை ஏமாற்றுவது அபயம் என்று வருபவனை கழுத்தை அருப்பதற்கு சமம். மனிதனின் மனத்தில் ஒரு வகையான திகில் பயத்தை உருவாக்கி கலங்கவைத்து அதை நிவர்த்தி பண்ண பரிகாரம் என்ற பணம்பறிக்கும் வித்தை செய்யும் ஜோதிடர்கள் ஜோதிட சாஸ்திரத்திற்கு புறம்பானவர்கள். அவர்களை மக்கள் இனம்கண்டுக்கொள்ளவே நான் இதை இங்கு சொல்லுகின்றேன்.
சித்தர்களின் நல்லஎண்ணத்தால் உறுவான ஜோதிடம் பிறவிவினையே அகற்றி ஆத்மா சொருபம் கண்டு ஆனந்தம்மடைய வைப்பதல்லாமல் மனிதர்களை ஏமாற்றி தீயவளியில் தள்ளுவதல்ல என்பதை மனிதர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். மனிதனுக்கு ஒரு கஷ்டதுக்கம் வரும்போது அதை தாங்கும் மனநிலையே பெருவதற்கு ஏற்ற நல்ல ஒழுக்கமான வழிமுறையே இந்த ஜோதிடசாஸ்திரம் சொல்லுமே தவிற, பரிகாரத்தால் கஷ்டத்தை மாற்றி மனிதனை எப்போதும் சந்தோஷமாக வைக்கமுடியும் என்று ஒரு போதும் சொல்லாது. உணர்த்த உணரும் உயிர் என்ற தத்துவத்தின்படி மனிதனின் உள்கிடக்கும் உயிரின் குணத்தையும்,சொயல்பாட்டையும் அவன் நல்வினைக்கு தகுந்த பருவக்காலத்தை சுட்டிகாட்டி செயல்படவைப்பதுதான் ஒரு ஜோதிடரின் கடமை.
ஜோதிடத்தை நம்புங்கள் ஆனால் அதற்கு அடிமையாகி விடாதீர்கள்.
நன்றி.
ஜோதிடர் எஸ்.அரிச்சந்திரன்

பிரம்மகுரு ஜோதிட ஆராய்ச்சிமையம்: கன்னி பொதுபலன்-பாகம்-1

பிரம்மகுரு ஜோதிட ஆராய்ச்சிமையம்: கன்னி பொதுபலன்-பாகம்-1 

என்னில் உள்ளது