ASTROLOGE

ASTROLOGE

08 February 2014

லக்னம் பற்றிய ஆய்வின் முடிவு

          லக்னம் பற்றிய இறுதியான முடிவு.
லக்னம் என்பது பிரசன்னலக்னம், ஆரூடலக்னம், உதையலக்னம்,ஜென்மலக்னம்,கடிகைலக்னம் பார்சூணாலக்னம் இந்துலக்னம் ஒராலக்னம்,தாராலக்னம் அம்சலக்னம் என்று பலகணிதம் உள்ளது இதில் இருந்து லக்னம் என்பது ஒரு செயலின் தொடக்கம் அல்லது ஆதாரபுள்ளி என்று மட்டும் உணரலாம் ..நாம் ஆராய்வது ஜென்ம லக்னம் ....ஒரு சிசு தாயின் வயிற்றில் கருவாக உறுவாகி 10 மாதம் தன் தாயின் பிராணனை உட்கொண்டு வளர்கின்றது அது கனிந்து சுயம் என்கின்ற முடிவான நிலையே அடையும் போது பிறவி என்கின்ற சூழல் உருவாகு கின்றது அது தன் தாய்வயிற்றில் இருந்து வெளி வந்ததும் தயின் தொடர்பு விட்டு போவதில்லை..எப்போது அந்த தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டு முடிச்சி போடப்படுகின்றதோ அப்போது தாயில் இருந்து கிடைத்த மூச்சின் ஒருபகுதி சிசுவின் உள் கும்பகமாக செயல்பட்டு அது தன் சுவாச உருப்பு திரந்து பிரபஞ்ச பிராணனுடன் தொடர்பு கொள்கின்றது அப்போது நம் உள் ஒரு சிரு வெற்றிடம் உண்டாகின்றது அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு வெளியில் உள்ள பிராணன் உள் சொன்று அந்த இடத்தை பூரணம் மாக்கு கின்றது இதுதான் லக்னம். முதல் பிராண அசைவு அல்லது உண்ரவு இது தான் லக்னம்..அந்த உணர்வில் ஒலி தோன்றி அதில் ஒளி தோன்றி நாதம் மாக சப்தசுரம் மாக காலம் தோன்று கின்றது உடனே சுரத்தின் மூலம் பூதம் வந்து அதிலே வாழ்கை ஆரம்பிக்கும் புள்ளி என்ற நான் உருவாகுகின்றது..இது எப்படி ராசி கட்டத்தில் குறிப்பிடுவது..அதன் நேரம் எப்படி கணிப்புக்கு உள் படுத்துவது ஒரு ஜாதகம் எழுதியபின் குறிப்பிட்ட.இந்த நபர் ஜாதகம் தான் என்பதை எந்த காரணிகளை கொண்டு உறுதிப்படுத்துவது.....மேலும் விரிவாகப்பார்போம் அதற்கு முன் ராசி என்பது என்ன என்பதை பற்றி அடுத்த பதிவில் பார்போம்.....லக்னம் பற்றி ஆன்மீகரீதியில் தத்துவரீதியிலும் சொல்லவேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம் நம் ஆராய்ச்சி ஜோதிடத்தில் லக்னம் என்பதை பற்றியதாக இருப்பதால் இந்துடன் முடித்துக்கொல்கிறேன் நன்றி வணக்கம்



03 February 2014

லக்னம் பற்றிய முடிவான கருத்து-1



லக்னம் பற்றிய முடிவான கருத்து-1
தகப்பன் என்கின்ற ஆணும் தாய் என்கின்ற பெண்ணும் கருவுருவாவதற்கு முக்கிய காரணிகள்......இந்த இரண்டும் நம் உடலில் வளராமலும் தேயாமலும் மாறாமலும்  இரண்டாக தோன்றினாலும் ஒன்றாக அதாவது அர்த்தநாதீஷ்வர் வடிவில் சொயல்பட்டு வருகின்றது....அதாவது மாதா,பிதா,குரு,தெய்வம் ..இதன் விளக்கம் இங்கு தேவை இல்லை நான் இனி வியாக்கியானமாக எழுதாமல் தத்துவமாக விளக்குகின்றேன் ....இது தூலமாகவும் சூட்சமுமாகவும் இருக்கின்றது ..கட்புலன் வடிவமைக்கு இந்த உடல் காரணம் வரைபடம்  நம் உள் இருக்க அதன் வெளிபாடுதான் உடல்....அப்படி பார்கும் போது நம் உடலில் அர்தநாதீஷ்வர் என்பது நம் கண்கள் .....கண் அல்ல கண்கள்...அதாவது வலது கண் சூரியனாகவும் ...தகப்பனாகவும் இடது கண் சந்திரனாகவும்  தாய்யாகவும் நின்று எனக்கு உலகை உணர்து கின்றது..அதவாது கோது என்கின்ற காலம் ராகு என்கின்ற மாயை திரையே  பின்னி அதன் உள்ளும்  சுற்றிவருகின்றது  அங்கு என் தந்தையும் தாயும் செய்யும் லீலை தான் இந்த  உலகம்.   மாறு கின்ற ஒரு பொருளை உணர்த்த மாறாத ஒரு பொருள் நமக்கு தேவை  அதை இந்த உடலாக பார்கும் போது கண்மணி தான் மாறதா பொருள்  ....இது நாம் பிறக்கும் போது எப்படி இருந்த்தோ அப்படியே இறக்கும் போதும் இருக்கும் அது வளராமல் மாறாமல் நம் உலக காட்ச்சிக்கு அசையாமல் சாட்சியாக இருக்கும்  அது இரண்டாக இருக்கும் ஆனால் ஒன்றாக காட்சி கொடுக்கும் இப்படி அதை விவரித்துக்கொண்டே இருக்லாம் ..அதை பற்றி பின்பு பார்போம் இதில் சில பேர் கோட்கலாம் கண் இல்லாதவர் உலகில் வாளவில்லையா என்று  இதை படித்தும் புரியாத மடையமாறுக்குதான் அந்த கேள்வி வரும் அப்படி பட்டவர்கள் இனி மேலும் தயவு செய்து இதை படிக்கவேண்டாம்.....இந்த கண்மணியின் கட்டமைப்பு ஆதாரம் அதாவது  சூட்சும ரகசியம் தான் லக்னம்......இதை எப்படி ஜென்ம லக்னமாக ஜாத கட்டத்தில் உண்ர்வது ..ஒரு சினிமா தியாட்டரில் உள்ள புரஜக்டரில் படத்தின் பிலீம் பொருத்தப்பட்டு இருக்கும் அதன் முன்பு லென்ஸ் அமைக்கபிபட்டு  வெளியில் திரை போடப்பட்டு இருக்கும் புரஜெக்டரின் உள் ஒரு ஒளி மிக்க பல்பும் பொருத்தப்பட்டு இருக்கும் இது எல்லோறும் அறிந்த்தே...இது தான் கரு உருவாகுதலின் ரகசியம் எல்லாம் சரியாக பொருத்தினாலும் திரையில் படம் தெரியாது......அங்கு என்ன செய்யவேண்டும் சுச்சு போடவேண்டும் மின்சாரம் சென்று அந்த பவர் மிக்க பல்பு முதலில் எரியவேண்டும் அது அசையாமல் இருக்கவேண்டும் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ என்ன அற்புதம் உடனே வணக்கம் என்ற தொடக்கம் திரையில் தோன்ற ஆரம்பிக்கும் இந்த திரைதான் ராகு ஒளி மிக்க பல்பு கேது .....இந்த இரண்டையும் இணைக்கும் புள்ளி மின்சாரம் லக்னம் ....இது என் அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதும் அதற்கு பெயர் மின்சாரம் தான் இப்போதும் அதற்கு பெயர் மின்சாரம் தான் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ இன்னும் பார்போம்... தத்துவமாக ...இனி எதிர் வேள்வி கேளுங்கள் அப்போதுதான் அதன் ரகசியம் வெளிபடும் இவ்வளவு  லக்னம் பற்றிய பதிவும் உங்களுக்கு உணர்த்தவே இனி உங்கள் சந்தேகங்களே கேளுங்கள் பதில் சொல்லபடும்  ...இன்னும் புரிதல் என்பது நான் தேடி கொண்டுதான் இருக்கிறேன்  உங்களோடு...நன்றி.

01 February 2014

கேதுவின் ரகசியம்



                     கேது

கேது என்பதன் ரகசியத்தை லக்ன ஆராய்ச்சி முடிந்தவுடன் எழுதலாம் என்று இருந்தேன் ஒரு தோழரின் தேடுதலுக்கு வலுசேர்க்க இங்கு எழுத வேண்டிய நிர்பந்தமாகிவிட்டது.....
அன்பு சகோதர புஜியம் என்றால் ஒன்றும் இல்லை என்பது பொருளல்ல எல்லாம் தன் அகம் கொண்டது என்பதும் உண்டு அது மற்ற எண்ணுடன் சேறும் போதுதான் அதன் வலிமையே வெளி படுத்தும்.அதே போல் ஆதி மூலம் கணபதி தான் கேது இதில் இருந்துதான் பிர எல்லாம் சிவன் உள்பட  ஆகையால்தான் நட்சத்திரத்தில் முதலாவதாக கேது குறிப்பிட்பட்டுள்ளது என்பது என் எண்ணம்  ஏன் அதை மேஷம் முதலாக கொண்டார்கள் என்றால் கேது விதையின் ரகசியமாகவும் மேஷம் செவ்வாய் பூமியாகவும் கொண்டு உற்பத்தியின் தொடக்கத்தை 0 புள்ளியில் இருந்து தொடங்கி இருக்கலாம் மற்றும் கேது என்பது வடதுருவம் 0 புள்ளி ராகு என்பது தென்துருவம் அதாவது 180 டிகிரி...கொடுத்தல் என்பது கேது..... பெற்றுக்கொள்ளல் என்பது ராகு.... இந்த இரண்டுக்கும் இடைபட்ட சக்தி பறிமாற்றமே பூமியின் உற்பத்திக்கு காரணமாக இருக்கின்றது...உலகில் இருக்கும் தாது மூலம் ஜீவன் ஆகிய ஆனைத்துமே இதன் ஆளுமைக்கு உற்பட்டது ஆகையால் தான் இதை பாம்புக்கு உருவகப்படுத்தினார்கள்....இன்னும் இதன் ரகசியம் என்ன வென்றால் இது இயங்குவதற்கு ......ஆகாரம்....அதாரம்.... காலம்.....இப்படி பல ரகசியங்கள் உள்ளன....மலையே மத்தாகவும் பாம்பை கயிராகவும் கொண்டதன் நோக்கம் ....கேது லிங்கம் மாகவும் ராகு ஆவுடையாகவும் இருந்து சிவலிங்கம் தோன்றிய வரலாறு ஆஹா ஆஹா அற்புத படைப்பு....இவை நான் படித்தல்ல உணர்ந்த்து தயவு செய்து இதற்கு ஆதாரம் எதாவது இருக்கின்றதா என்று என்னிடம் கேட்க வேண்டாம் அதற்கு இல்லை என்பது தான் பதில் படித்து உணர்ந்து பாருங்கள் காலபுருஷன் ரகசியம் தெரியும்..நன்றி குற்றம் இருந்தால் எச்சிலை உமிழ்ந்து செல்லவும் நன்றி. அசுவதி நட்சத்திரத்தை முதலாவதாக கொண்டதன் காரணம் இது வாக இருக்கலாம் என்பது என் கணிப்பு ....

குழந்தைக்கு பெயர் அமைப்பது யார்.....


பெயர்,அழகு,இன்பம்,பிணி,மூப்பு,சாக்காடு, இந்த ஆறும் கருவில் அமைத்தப்படியே.....என்பதுதான் சாஸ்திரம். கருஉருவாக காரணமாக இருப்பவர்கள் பெற்றோர்கள் அவர் உணர்வில் இருந்துதான் அனைத்தும் உற்பத்தி ஆகின்றது அவர்கள் உணர்வில் வரும் வார்த்தைகளே குழந்தைக்கு பெயராக மலரவேண்டும்.....அப்போதுதான் அது இயல்புஉண்ரவோடு வாழக் கற்றுக்கொள்ளும். நான் சிருவயதாக இருக்கும் போது சில முதியவர்கள் தவறு செய்தவர்களை திட்டுவார்கள் எப்படி என்றால் உனக்கு பெயர்வைத்தவன் எவன் என்று ஏழனமாக திட்டுவார்கள் அதன் பொருள் என்னவென்றால் நீ பிறக்க காரணம் மான அப்பா வேறு யாரோ எனற காரணம் ஆகும்.......இப்படி பெயர் தேர்ந்து எடுப்பதில் அப்பாவுக்கு உள்ள உரிமையே இப்போது ஜோதிடகள் 
வாங்கி உள்ளனர்......எடுத்து காட்டாக ஆயில்யம் நட்ச்சத்திரத்திற்கு எழுத்து -பு,டு,டே,டோ....என்பதாகும் இதில் நீங்கள் என்ன பெயரை வைக்க சொல்லமுடியும் ....டு....என்பது கொண்டு என்னபெயர்வைப்பது என்று திருதிருவென்று முழிக்கும் மக்களுக்கு அதில் தான் வைக்கவேண்டும் இல்லாவிட்டால் உங்கள் குழந்தைக்கு ஆயுள் குறைவு என்று பேமாரி தனத்தை காட்டும் ஜோதிடர்களுக்கு என்ன சொல்வது....இவ்வளவு தெழிவாக தமிழ் மொழிய உருவாக்கிய சித்தகாலபுருஷ்ன்மார்கள் பெயர் வைப்பது டு..டி..டே என்ற எழுத்தில் வைக்கவேண்டும் என்று ஒரு போதும் சாஸ்திரத்தில் சொன்னது இல்லை இனியாவது ஒரு புனித கர்மம் என்ற ஜோதிட தொழிலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் ....பெயர் ராசி,எண்கணிதம் பெயர்வைத்து பொருத்தம் பார்பது போன்ற பித்தலாட்ட செயலை விட்டு விட்டு ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கின்றதோ அதை கற்று சொல்வது நல்லது ,,,,,,நன்றி

ஜோதிடம் பற்றிய ஒரு கண்ணோட்டம்



    ஜோதிடம் பற்றி ஒரு கண்ணோட்டம்
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.
நம் முன்னோர்களாகிய முனிவர்கள் தங்களது தவ்வலிமையாலும். அறிவாற்றலாலும் வானின் கண் தோன்றியுள்ள சூரியன் முதலான கோள்களையும் அசுவதி முதலான நட்ச்சத்திரங்களையும் மேஷம் முதலான இராசிகளையும் மற்றும் பல கிரகங்களையும் ஆராய்ந்து சூரியனின் ஒளியே கொண்டு உத்தராயணம், தக்ஷ்ணாயனம் என்ற பாகுபாட்டையும்.வசந்தம் முதலான ருதுகளையும்,சித்திரை முதலான மாதங்களையும், வளர்பிறை தேய்பிறை என்ற இரு காலத்தையும்

நாள்,திதி,யோகம்,கரணம், போன்ற பஞ்சாங்கத்தையும்,அதன் காலஅளவையும் நிர்ணயித்து மேலும் வானஆராய்ச்சிக்கு உரிய நூட்பமான பல விஷயங்களையும் தங்களது கணிதஅறிவால் ஆராட்சி செய்து வானசாத்திரத்தை உருவாக்கினார்கள்.இந்த சாஸ்திரம் மூலம் மனிதவாழ்வின் வருங்கால இன்பதுன்பங்களை முன்கூட்டி அறிந்துக்கொள்ள பயன்படும் கலையே ஜோதிடக் கலையாகும்.
தாய் வயிற்றில் குழந்தை கருவாக உருவாகி வளர்ந்து இம்மண்ணுலகில் குழந்தை பிறக்கும் அதே தருணத்தில் வானில் உலவும் இதர ஒன்பது கோள்களின் நிலையே அடிப்படையாக்க் கொண்டு குழந்தையின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழப்போகும் யாவற்றையும் அறிந்துக்கொள்ளு உதவும் ஒர் கணிதகலையே ஜோதிடசாஸ்திரம்.
இப்பிறப்பில் மனிதன் ஒருவனுக்கு இறைவனால் தொகுத்தளிக்கப்பட்டுள்ள பிராராப்த்த பகுதியே அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்ற ஒர் அற்புதமான கணிதகலையே இது. ஆனால் இக்கலையின் பலித்த்திற்கு முக்கியமான நிபந்தனைகள் மூன்றுண்டு அவை.
1. குழந்தை பிறந்த தேதி,நேரம்,பிறந்தஇடம், இம்மூன்றும் இம்மியும் பிறழாதப்படி சரியாக நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.
2. ஜாதகத்தை பிழையின்றி கணித்து வரையும் திறமைஜோதிடர்க்கு இருக்கவேண்டும்.
3. ஜாதகப்பலனை கூறும் ஜோதிடர் கேட்கவந்தவரின் மனநிலையே புரிந்து அதற்கு தக்கவாறு முகஸ்துதி செய்து பணத்துக்கோ,புகழுக்கோ ஆசைபடும் துர்க்குணம் இல்லாதவராயும். இராசி மற்றும் கிரகத்தின் குண,பாவ,பலத்தை நன்குஉணர்ந்து குரு மொழியில் நம்பிக்கை கொண்டு அதன்மூலம் கிடைக்கும் உன்மையான அனுமானபலத்தை எடுத்துரைக்கும் வாக்கு வன்மையான ஜோதிடராக யிருக்கவேண்டும்.
இம் மூன்றில் ஒரு தகுதி இல்லாமல் போனாலுங்கூட ஜாதகபலன் தவறாகிவிடும்.
ஜோதிடம் என்பது ஒவ்வெறு தனி மனிதனின் வாழ்கையில் ஏற்படும் நிகழ்வுகளை இடம்,பொருள்,காலம்,நிமித்தம், போன்ற காரண காரியத்தின் மூலம் தெளிவாக அறியமுடியும்.
மனிதர்கள் எப்போதும் மனத்தால் தனக்கு தானே ஒரு கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றனர் அது என்னவென்றால்.நான் இதை இப்போது செய்யலாமா?,என் எண்ணம் நிறைவேறுமா?, என் எண்ணம் சரியா அல்லது தவறா?, நான் இதை எப்போது செய்யலாம்?, என் தேடுதல் ஆசை எப்பேது நடக்கும்?, நான் இந்த கஷ்டத்தில் இருந்து எப்போது விடுதலை அடைவேன்?. இது போன்ற கேள்விகள் மனித மனதில் எப்போதும் தோன்றிக் கொண்டேயிருக்கும். இந்த கேள்விக்கு தகுந்தபதிலை அறிவு பக்குவப்பட்ட மனிதர்கள் தனக்கு தானே தேடி வெற்றிக்கொள் கின்றனர் இவர்களுக்கு ஜோதிடமும்,ஜோதிட ஆலோசனையும் தோவையில்லாத ஒன்றுதான்.
ஆனால் பலவாறகாக சிந்தித்தும் அறிவு தெழிவுபெறாமல் கலக்கம் பெற்ற மனிதனுக்கு ஒரு அறிவுறை தேவைப்படுகிறது இவர்கழுக்குதான் ஜோதிட சாஸ்திரம் துனைபுரிகின்றது. இப்படி கலக்கம் பெற்று வரும் மனிதனுக்கு அவன் பிறவி ஜாதகத்தை தெழிவான முறையில் ஆராய்ச்சி பண்ணி அதன்மூலம் கிடைக்கும் கிரககுண பலன் களையும் அவன் பருவகால திசா பலனையும் உணர்ந்து அவன் அறிவுதெளியும் வரை போதிக்கவேண்டும் இதுவே ஒரு குரு மொழி உணர்ந்த ஜோதிடரின் கடமையாகும்..
இதுவல்லாமல் இன்றைய வியாபார விளம்பரத்திற்குவேண்டி ஜோதிடத்திற்கு சம்ந்தம் இல்லாத எண்கணிதம்,கையழுத்து ஜோதிடம்,பெயர்மாற்றுதல்,ஆவிகளோடு பேசுதல்,போன்ற ஏமாற்று கலையே பயன்படுத்தி அறிவு தெழிவுயில்லாமல் வரும் மனிதனை ஏமாற்றுவது அபயம் என்று வருபவனை கழுத்தை அருப்பதற்கு சமம். மனிதனின் மனத்தில் ஒரு வகையான திகில் பயத்தை உருவாக்கி கலங்கவைத்து அதை நிவர்த்தி பண்ண பரிகாரம் என்ற பணம்பறிக்கும் வித்தை செய்யும் ஜோதிடர்கள் ஜோதிட சாஸ்திரத்திற்கு புறம்பானவர்கள். அவர்களை மக்கள் இனம்கண்டுக்கொள்ளவே நான் இதை இங்கு சொல்லுகின்றேன்.
சித்தர்களின் நல்லஎண்ணத்தால் உறுவான ஜோதிடம் பிறவிவினையே அகற்றி ஆத்மா சொருபம் கண்டு ஆனந்தம்மடைய வைப்பதல்லாமல் மனிதர்களை ஏமாற்றி தீயவளியில் தள்ளுவதல்ல என்பதை மனிதர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். மனிதனுக்கு ஒரு கஷ்டதுக்கம் வரும்போது அதை தாங்கும் மனநிலையே பெருவதற்கு ஏற்ற நல்ல ஒழுக்கமான வழிமுறையே இந்த ஜோதிடசாஸ்திரம் சொல்லுமே தவிற, பரிகாரத்தால் கஷ்டத்தை மாற்றி மனிதனை எப்போதும் சந்தோஷமாக வைக்கமுடியும் என்று ஒரு போதும் சொல்லாது. உணர்த்த உணரும் உயிர் என்ற தத்துவத்தின்படி மனிதனின் உள்கிடக்கும் உயிரின் குணத்தையும்,சொயல்பாட்டையும் அவன் நல்வினைக்கு தகுந்த பருவக்காலத்தை சுட்டிகாட்டி செயல்படவைப்பதுதான் ஒரு ஜோதிடரின் கடமை.
ஜோதிடத்தை நம்புங்கள் ஆனால் அதற்கு அடிமையாகி விடாதீர்கள்.
நன்றி.
ஜோதிடர் எஸ்.அரிச்சந்திரன்

பிரம்மகுரு ஜோதிட ஆராய்ச்சிமையம்: கன்னி பொதுபலன்-பாகம்-1

பிரம்மகுரு ஜோதிட ஆராய்ச்சிமையம்: கன்னி பொதுபலன்-பாகம்-1 

23 June 2011

துலாம் பொதுபலன் பாகம்-2


இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஆழ்ந்த கருத்துகளை நன்றாக தீர யோசித்த பின் தான் வெளியிடுவர். சாதாரணமாக பிறருக்கு வாக்களிக்க மாட்டார்கள். வாக்களித்தபின் எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் பின்வாங்காது கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தயங்க மாட்டார்கள். நீதி, நேர்மை, நெறி முதலியபண்புகளைக் கொண்ட இவர்கள் உண்மைக்காகவும் நீதியை நிலை நாட்டுவதற்காகவும் சரளமாக வாதிடுவார்கள். சட்ட திட்டங்களை வேறுக்கும் இவர்கள் நீதியை நிலை நாட்ட சட்டதிட்டத்தைத் தளர்த்தும்படி வாதாடுவார்கள். இவர்களைப் பின்பற்ற பெருவாரியான மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள்.
வாக்கு சாதுரியமுடையவர்களானாலும் சில சமயங்களில் கோபாவேசத்துடனும், ஆத்திரத்துடனும் பேசுவர். அணியணியாக தர்க்க நுணுக்கத்துடன் எப்பொருளைப் பற்றியும் காரிய காரணங்களுடன் விளக்கிப் பேசி கேட்பவர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் திறமை பெற்ற இவர்கள் வக்கீலாகவோ அல்லது நீதிபதியாகவோ பதவி வகிக்கத்தக்க ஆற்றல் படைத்தவர்கள் என்று கூறினால் மிகையாகாது.
சம நோக்குடைய இவர்கள் அதிக சரீர பிரயாசை கொள்ளாதவர்கள். அதிக கஷ்டத்தையும் உங்களால் சகிக்க முடியாது. கற்பனா உலகில் நீங்கள் சஞ்சரிப்பதால் நீங்கள் போடும் திட்டங்களைப் பிறர் புரிந்து கொள்வது மிகக் கடினம். பெரும்பாலும் ஆழ்ந்த யோசனை உடைய நீங்கள் எந்தக் காரியத்தையும் சீர்தூக்கிப் பார்த்து லாப நஷ்ட கணக்குகளை ஆராய்ந்து பார்த்த பின்புதான் இறங்குவீர். பிறருடைய ஆலோசனைகளை எளிதில் அங்கீகரிக்காத நீங்கள் தம்முடைய அபிப்பிராயத்தை மட்டும் வெளியிடும் சுயநலவாதிகள். பிறர் யோசனைக்கு இடம் கொடுக்காத நீங்கள் தம்முடைய ஆலோசனைகளைப் பிறர் அங்கீகரிப்பார்களென்ற நம்பிக்கை உடையவர்கள். மக்கள் அபிவிருத்தியில் கவலைகள் நிறைந்து காணப்படும் சம நோக்குடையவர்களாயினும், சமயத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப பசையுள்ள பக்கம் சாய்ந்து கொடுப்பார்கள்.
வாழ்க்கையில் பல விவகாரங்களில் உங்களுடைய சூழ்நிலையை சரிக்கட்டுவதற்கே உங்களுடைய வாழ்நாள் வீணாகக் கழியும். உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்ற பேராவல் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் நீதி, நெறி, சமயம், சட்டதிட்டங்களை ஆயுதங்களாகக் கொண்டு எதற்கும் சளைக்காமல் போராடும் உங்களை கண்டு மற்றவர்கள் அஞ்சுவார்கள். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதைவிட, தோல்வியுறாமல் போவதுதான் பெரிதெனக் கருதும் நீங்கள் தோல்வியுற்றாலும் துவண்டு போகாதவர்கள்.
போக்கு சாதுரியம் மிகவும் படைத்த உங்களிடம் பேச்சுக்கொடுத்து வெற்றி பெறுவது மிகக் கடினம். ஓபாமல் பேசக்கூடியவர் அல்லராயினும் உங்களுடன் பேசும்போது மிக ஜாக்கிரதையுடன் வார்த்தைகளை அளந்து பேசவேண்டும். ஏனெனில் பிறர் பேச்சில் குற்றம் குறைகளைக் கண்டுபிடிப்பதே அவர்களது குறிக்கோள். பிடி எங்கு அகப்படும் என்று சமயம் பார்த்துக் கொண்டே இருக்கும் நீங்கள் அகப்பட்டால் எளிதில் விடமாட்டீர்கள். பிறர் பேசுவதை வெட்டிப்பேசுவதில் உங்களுக்கு அலாதிப் பிரியம். நேர்மையும், நியாயமும் வார்த்தைகளில் தொனிக்கும். உங்களை அறியாதவர்கள் சண்டப் பிரசண்டர் என்று தவறாகக் கருதிவிடுவதும் உண்டு. ஆனால் சுபாவமாகவே இவர் பேசுவது பிறருக்கு வாதாடுவதுபோல் தோன்றும். வெளிவட்டாரங்களிலும் நண்பர்களிடமும் ஒளிவு மறைவின்றி சரளமாகப்பேசும் நீங்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் பெட்டிப் பாம்புபோல அடங்கிவிடுவீர். இந்த லக்கினத்தில் உதித்தவர்கள் வழக்கறிஞர்களாக இருந்தால் நீதிபதிகளும், நீதிபதிகளாக இருந்தால் வழக்கறிஞர்களும் இவர்களிடம் திணறுவார்கள்.
பெரும்பாலும் குடும்பத்தில் இவர்களுக்கு மூத்தவர்கள் இருக்கமாட்டார்கள். அப்படி இருந்தாலும் பெற்றோர் இந்த ராசி நேயர்களைக் கலந்தாலோசிக்காமல் எந்தக் காரியத்திலும் ஈடுபடமாட்டார்கள். ஒரு சிலருக்கு மூத்த சகோதரர்களுக்குத் திருமணம் நடப்பதற்கு முன்னமேயே திருமணம் நடந்து விடும். சிறுவயதிலேயே குடும்பப் பொறுப்பு ஏற்பட்டு குடும்பத் தலைவன் என்ற பெயரும் ஏற்பட்டு விடும். திருமணத்துக்குப்பின் மனைவி மக்களின் உடலாரோக்கியம் தளர்ச்சியுறுவதால் ஏதாவது ஒரு கவலையில் ஈடுபட்டிருப்பர். சதாகாலமும் மருந்தும் கையுமாக இருக்க வேண்டிய வரும். பெரும்பாலோர்க்குத் திருமணம் ஆகி வெகு நாட்கள் ஆகியும் குழந்தை பிராப்தி ஏற்படுவதில்லை. மனைவி கருத்தரித்து பலமுறை கருச்சிதைவு ஏற்படும்; அல்லது உயிருடன் குழந்தைகள் பிறந்தாலும் உயிர் தரிப்பது துர்லபமாகும். நெடுநாள்கள் புத்திர பிராப்தி இல்லாததால் கவலை மிகுந்து தீர்த்த யாத்திரைகள் புரியவும் நேரிடும். சாந்தி தோஷபரிகாகங்களைச் செய்தபின் சந்ததி-ஏற்பட்டு குடும்பம் விருத்தியாகும். அனேகமாக இவர்களுக்குப் பெண் குழந்தைகள் தான் அதிகமாகப் பிறக்கும். ஆரம்பத்தில் குழந்தைகளே இல்லையென்று கவலைப் பட்டவர்களுக்கு ஆயுள் முடியும் காலத்தில் கருத்தடை முறைகளைக் கையாளக் கூடிய அளவுக்கு அதிக குழந்தைகளைப் பெற்றிடுவர்.
குடும்பப் பொறுப்பு உங்களுக்கு அதிகமாகையால் உங்கள் கையில் பணம் தங்குவது அரிதாகும். தராசில் எடை போடுவதுபோல் வரவும் செலவும் சரிசமமாகவே இருக்கும். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்ற முதுமொழிக்கொப்ப உங்களது வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். கையில்பணம் வருவதற்கு முன்பே செலவினங்கள் காத்துக் கொண்டிருக்கும். தப்பித் தவறி ஏதாவது சேமிப்பு நிதியில் பணம் சேர்க்க நினைத்தாலும் எதிர்பாராத செலவுகள் தோன்றி உங்களைத் திக்கு முக்காட வைக்கும். இவரைவிட இவரது மனைவி இரண்டு பங்கு செலவாளியாக இருப்பதும் உண்டு. ஆனால் செலவுக்கேற்றபடி பணஉதவி எந்த நேரத்திலும் தாராளமாக கிடைக்கும். குடும்ப நிலையையும், எதிர்காலத் தேவைகளையும் முன்பே அறிந்த நீங்கள் ஸ்திர சொத்துக்களை வாங்குவதிலும், நிலம், வீடு முதலிய ஸ்திரப் பொருள்களை வாங்கிச் சேர்த்துக் கொள்வதிலும் கருத்தைச் செலுத்தினால் பிற்கால வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் செலவுகளுக்குப் பயன்படும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்களுடைய குடும்பத்தினருக்கும், மக்களுடைய எதிர்கால வளர்ச்சிக்கும், மனைவியின் ஊதாரியான குணத்துக்கு ஏற்ப தாராளமாகச் செலவு செய்யவேண்டுமென்ற தருணத்தில் வேண்டுமானால் எதிர்பாராதவிதமாக பணவசதி ஏற்படுமே தவிர, தன்னுடைய சுகத்திற்காகவோ, ஆடம்பர வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காகவோ, பெற்றோர் உடன்பிறந்தோர்க்கு உதவி புரியவோ, தாயாருடைய குறைகளைத் தீர்க்கவோ உங்களுக்குப் பணம் பெயராது.
பிறருக்கு உபகாரமாகவும், நீண்டநாள் கடன், வட்டி செலுத்தவும், உயர்ந்த வாடகை செலுத்தவும் உங்களுடைய பணம் செலவாகுமே தவிர கையில் தங்காது; உடனுக்குடன் செலவாகம். ஆனால் கேட்ட இடத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் தாராளமாகக் கிடைக்கும் எனினும் நிரந்தர வருவாய் எப்போதும் உங்களுக்கு இருக்கும். இறுதிவரை சுலபமாகச் சம்பாதித்து தனது சந்ததிகளுக்குச் சேமித்து வைத்த பிறகுதான் ஓய்வுபெற்று அமைதி கொள்வர். பரோபகார சிந்தையுடையவர்களாதலால் நல்ல காரியங்களக்காகவும், பொது நல சேவைக்காகவும் அடிக்கடி செலவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். வெளியூர்ப் பிரயாணங்களையும், தூரதேச யாத்திரைகளையும் அடிக்கடி மேற் கொள்வதாலும் பிரயாணச் செலவுகளும் அதிகரித்துக் காணும்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கும், இவர்களுடன் பிறந்த சகோதர-சகோதரிகளுக்கும் ஒற்றுமை நீடித்திருக்காது. வெளியுலகுக்கு ஒற்றுமையாக இருப்பதுபோல காணப்படினும், உள்ளூ¬ வேற்றுமை கலந்துகாணப்படுவர். இவர்களுடைய சுகக்குறைவுக்கு இவர்களது உடன் பிறந்தவர்களே காரணமாக இருப்பார்கள். இவர்கள் மனம் இளகி தம் சகோதரர்களுக்கு தம்மால் இயன்ற உதவி புரிய எத்தனித்தபோதிலும் சூழ்நிலை இதற்கு நேரிடையாக ஏற்படும்.
இந்த லக்னத்தில் தோன்றியவர்கள் முயற்சி குன்றாதவர்கள். இவர்கள் முயன்ற காரியங்களில் எதிர்ப்புகள், இடையூறுகள் தோன்றி மனதைச் சஞ்சலப்படுத்தினாலும் ஓரிரு முயற்சியிலும், தேர்ச்சியிலும் தவறினாலும் மிரட்சியடைய மாட்டார்கள். உறுதியும், உற்சாகமும் கொண்டு பிறர் சாதிக்க முடியாத காரியங்களையும் இறுதியில் வெற்றியுடன் சாதித்துக் காட்டுவார்கள். பெரும்பலனை எதிர்பார்த்து முயற்சியில் ஈடுபட்டாலும் இறுதியில் வெற்றிபெற்று புகழ்மாலை சூடுவார்களேயன்றி வெகுமதி ஒன்றும் கிடைக்காது. பதவி, அந்தஸ்து, கௌரவம், செல்வச் சிறப்பு, குடும்பநிலை, கல்வி முதலியவை இவர்களின் ஆற்றலை மாற்றிடாது. இவர்கள் கொண்ட லட்சியங்கள் நிறைவேறுவதற்கும் இவை குறுக்கே நிற்காது. இந்த லக்னத்தில் தோன்றிய பெரும்பாலோர் தங்கள் சூழ்நிலைக்கேற்ப குடும்பகௌரவத்திலும், சமூகத் தொண்டிலும், அரசியல் சேவையிலும் கல்வி வளர்ச்சியிலும், ஞான மார்க்கத்திலும், நல்ல கீர்த்தியுடன் திகழ்வார்கள். தோல்வியிலும் இவர்கள் கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். சிலர் ஆழம் தெரியாமல் சில காரியங்களில் இறங்குவதால் திக்கித் திணறி மூழ்கி தட்டுத் தடுமாறி கரையேறிவிடுவார்கள்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வயது வளர வளர தாயாரின் பற்றுதல் குறையும். ஒரு சிலர் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தும் வயதுவந்ததும் தாயாரின் ஆதரவை இழப்பார்கள். இவர்களுக்கென்று தனிக்குடும்பம் ஏற்பட்டதும் தாயாருக்கும் இவர்களுக்கும் பரஸ்பர நேசம் குறைந்து இருவரும் பிரிந்து வாழ்ந்திடுவார்கள். இல்லையெனில் தாயின் அன்பும், ஆதரவும் குறைந்து காணும். ஒரு சிலருக்கு கல்வி முடிவதற்கும் தாயார் விதி முடிவதற்கும் சரியாக இருக்கும். தாயாரின் விருப்பத்துக்கு விரோதமாக திருமணம் செய்து கொள்வார்கள். அல்லது குடும்ப வாழ்க்கை நடத்தும் போது தாயார் இவர்களிடத்தில் இருக்கமாட்டார்கள்.
ஏழை எளியவர்களுக்கு உதவிபுரிவதும், கஷ்ட நிலையில் உள்ளவர்களுக்கு ஆதரவு அளிப்பதும் துயரத்தில் ஆழ்ந்தவர்களை மீட்பதும் இவர்களுக்கு சுகமளிக்கக்கூடிய விஷயங்களாகும். இயற்கையாக இவர்கள் சுகமளிக்கக்கூடிய விஷயங்களாகும். இயற்கையாக இவர்கள் சுகமனுபவிக்கக் கூடியவர்கள் அல்லரானாலும் மற்றவர்களுக்கு சுகத்தை அளிக்கக் கூடியவர்கள். சிறுவயதில் பெரும்பாலும் கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல சுகத்தை இவர்கள் அனுபவித்திடுவார்கள். குடியிருக்க நல்ல வீட்டு வசதியும், வாகன வசதியும் பின் வயதில் இவர்களுக்கு நன்கு அமையும். நடுவயதுவரை பிறர்களுக்காக வாதாடுவதும், போராடுவதும் இவர்களுடைய லட்சியங்களாகும்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் தம்முடைய சுய முயற்சியால் கல்விப் பயிற்சியில் நல்லசிரத்தை செலுத்தி உயர்ந்த கல்விச் சிறப்பை அடைவார்கள். பெரும்பான்மையோர் பட்டதாரிகளாக விளங்குவார்கள். இரும்பு, காந்தம், இயந்திரம், உலோகப்பொருள்கள் முதலிய அம்சங்களுக்குண்டான எலக்டிரிகல் என்ஜினியரிங், காட்டு இலாகா பயிற்சி, மெகானிக்கல் என்ஜினியரிங், சுரங்க வேலை நிபுணத்துவம், டைப்ரைடிங், டெலிபோன், டெலிகிராப் ஆகியவற்றில் தொழிற் பயிற்சிகளைப் பெற்று தங்களுடைய திறன், ஊக்கம் இவற்றுக்குத் தக்கவாறு தேர்ச்சியடைவார்கள். ஆனால் எதிலும் தயக்கமும், நிதானமும் இருந்தே தீருவதால் ஒரு சிலர் ஓரிரு முயற்சிசெய்த பின்னர் தான் தேர்ச்சி அடைவார்கள். ஒரு சிலர் தங்கு தடையின்றி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெறுவார்கள். ஒரு சிலர் சட்டக்கல்வி பயின்று அதில் தேர்ச்சியும் திறமையும் பெறுவார்கள்.
அனேகமாக இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஆண் சந்ததியே இருக்காது எனலாம். அப்படி இருந்தாலும் மிகக்குறைவாகவே இருக்கும்; பெண்மக்கள் அதிகம் உண்டு அதுவும் வயது கடந்த பிறகுதான் ஏற்படும். பிள்ளைகளால் இவர்களுக்குக் கவலைகள் தான் அதிகம் ஏற்படுமேயன்றி அவர்களால் சுகமோ, வசதியோ, ஆதரவோ ஏற்படாது. பிள்ளைகளால் இவர்களுடைய வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் சம்பாதனையில் பெரும்பகுதி செலவிட நேரிடும். சில சமயங்களில் பிள்ளைகளுக்கும் இவர்களுக்கும் மன வேற்றுமையும் அதிகரிக்கும்.
இந்த லக்னத்தில் தோன்றியவர்களுக்கு சாதாரணமாக எந்த நோயும் அணுகாது. நோய் தோன்றினாலும் உடனுக்குடன் குணம் அடைவர். வாதம், வாயு, சிலேஷம் சம்பந்தமான அயர்வுகள் அவ்வப்போது தோன்றி வாட்டினாலும், நிரந்தரமாக இடம் பெறாது. இவற்றுக்குக்காரணம் ராசி நேயர்கள் அவ்வப்போது உட்கொள்ளும் பக்குவமில்லாத பொருள்களேயாகும். கிழங்கு வகைகள், கடலைப் பருப்பு, மாமிசம், கொழுப்பு வகைப் பண்டங்கள், எண்ணெயில் செய்த பலகாரங்கள் சீக்கிரம் ஜீரணமாகாத வஸ்துக்கள் இவையாவற்றையும் இவர்கள் நீக்கவேண்டும். இதுவுமில்லாமல் நேரம் தவறி இவர்கள் உணவு உட்கொள்ளுவதே பெரும்பாலும் அஜீரணக் கோளாறுகளுக்குக் காரணமாகும். சாப்பிட்டு நெடுநேரம் புளியேப்பம் மூச்சுக்கொரு வந்துகொண்டே இருக்கும். சாப்பிட்டவுடன் வயிற்று வலியும், உடலாயாசமும், வாய்க்குமட்டல் உமிழ் நீர் சுரந்து கொண்டே இருத்தல் போன்றவை அடுத்த படியாகத் தோன்றும். இத்தகைய குறிகளைக் கண்டதும் இரண்டு மூன்று நாட்களுக்கு அன்ன ஆகாரமில்லாமல் உபவாசமிருந்தால் எல்லாம் சரியாகிவிடும். இத்தகையோர் பக்குவமாகவும் பத்தியமாகவும் இருத்தல் மிக அவசியம். சிலர் நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவதை விடுத்து உச்சி நேரத்துக்கு முன்பு சாப்பிடும் பழக்கத்தைக் கொள்வராயின் இவர்களுக்கு எந்த நோயும் அணுகாது. பச்சைமிளகாய், பச்சை மாங்காய் முதலியவற்றை விலக்கவேண்டும். இதுபோலவே இரவு வெகுநேரம் கண் விழித்திருப்பதையும், நேரம் கழித்து சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
இந்த லக்ன ஜாதகர்களுக்கு பெரும்பாலும் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகவே கடன் ஏற்படும். தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகவும், வாகனச் சேர்க்கையாலும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவும், வியாபார முன்னேற்றத்துக்காகவும் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். ஆனால் இவர்கள் குறைந்த வட்டிக்குத் தான் கடன் வாங்குபவர்களாதலால் கூட்டுறவு சங்கங்கள் பாங்கி சேமிப்பு நிதி போன்றவற்றில் நீண்ட நாள் செலுத்தக்கூடிய கடன்களைத்தான் வாங்குவார்கள். வட்டியில்லாக் கடனும் இவர்களுக்கு கிடைக்கும். கடன் பெறுவதில் இவர்களை பாக்கியசாலிகள் எனலாம். ஏனெனில் இவர்கள் கேட்ட இடத்தில் கடன் தாராளமாக கிடைக்கும். நியாயவதிகளானதால் வழக்கு வியாஜ்யங்களில் இவர்களுக்குத் தான் வெற்றி ஏற்படும்.
மகளின் உடல்நலக் குறைவும், மனைவியின் உடல சதியும் ஜாதகர்களுக்குக் கவலைதரும் அம்சங்களாகும், அடிக்கடி சிகிச்சை செய்ய நேரிடுவதால் மருத்துவ செலவுகள் அதிகமாக ஏற்படும். தம்மைப்பற்றி எப்போதும் கவலைப்படாத இவர்களுக்கு பெண்களைப் பற்றிய கவலைகள் ஏற்படும். இவருடைய இளைய சகோதரர்களாலும் கடனும் கவலைகளும் ஏற்படும். இவர்களுக்கு ஏதாவது ஒரு நோய் அல்லது கவலை இருந்து கொண்டே தானிருக்கும். ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுவதும், பிறர்க்காக உழைப்பதிலும்தான் தன் கவலைகளையும் நோயையும் மறக்க முடியும்.
திருமணமானபின் பொறுப்புடன் குடும்ப நிர்வாகத்தை ஏற்று நடத்தி அரும்பாடுபட்டு தம்முடைய சுயநிலையை உயர்த்திக் கொள்ளப்பாடுபடுவீர். யாருடைய ஆதரவையும் எதற்கும் எதிர்பார்க்கும் நிலைமை உங்களுக்கு ஏற்படாது. அதற்கு நீங்கள் செய்த பாக்கியம்தான். நிராதரவான நிலையிலும், எத்தகைய மனக்குறைகள் ஏற்படினும் தம்பதிகள் ஒருவரைவிட்டு மற்றவர் பிரிந்திருக்கமாட்டார்கள். உங்களுக்கு அமையும் மனைவியும் உங்ளுடைய தேவைகளை முன்கூட்டியே யூகித்தறிந்து அதன்படி நிறைவேற்றக் கூடிய புத்தி சாதுரியமுடையவர்கள். வீட்டு வேலைகளை சுறுசுறுப்புடன் முடித்துக் கொண்டு உங்கள் தேவைக்கேற்ப காலமறிந்து உணவளிக்கும் மனைவி வாய்ப்பது இவர்கள் செய்த பாக்கியமேயாகும். உங்களுக்கு வாய்க்கும் இல்லாள் சகலவசதிகளையும் பொறுப்புடன் கவனித்துக் கொண்டு உங்ளுடைய வருவாயில் குடும்ப நிர்வாகத்தை நடத்திச் செல்லும் பாங்க பெற்றவள். இருப்பதைக் கொண்டு சிக்கனமாக வாழ்க்கையை நடத்திச் செல்வாள்.
இவர்களுடைய குடும்பத்தில் மனைவியின் கைதான் ஓங்கி இருக்கும். இவருடைய விருப்பங்களைவிட இவர்களின் மனைவியின் விருப்பங்கள் எளிதில் நிறைவேறிவிடும். இவர்களும் இதற்கு உடன்படுவார்கள். இவர்கள் அனேகமாக பெண்டாட்டி தாசர்களாக இருப்பதும் உண்டு.
உங்களின் மனைவிக்கு இரத்த சம்பந்தமான கோளாறுகளும், மாதவிடாய்க் கோளாறுகளால் கர்ப்பகோசத்தில் ஆயாசங்களும் ஏற்படலாம். ஒரு சிலர்க்கு கர்ப்பப்பை கோளாறுகளுக்கான ரண சிகிச்சை செய்யவும் நேரிடும். தலைசுற்றல், மயக்கம், ஓயாத் தலைவலி, அடிபடுவதால் ரணகாயங்கள், மேலிருந்து கீழே விழுவதால் எலும்பு முறிதல், இரத்தக்கட்டிகள், தீப்புண் போன்றவை ஏற்பட்டு சிகிச்சை பெற நேரிடும். திடீரென்று கணவன் கண்டித்தாலும் பதற்றமான வேலைகளையும் திட்டவட்டமாக செய்து முடிப்பார்கள். நோய் வந்தாலும் ஓய்வு எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எதையும் தாமே செய்து முடிக்க வேண்டுமென்ற ஆற்றல் ஒரு புறமிருந்தாலும், மற்றவர் செய்வது இவர்களுக்கு பிடிக்காததினால் எல்லாக் கரியங்களையும் சுயமாகவே செய்து முடிப்பார்கள். மேலும் இவர்களது ஆதரவற்ற நிலையைக் கண்டுபரிதாபபடக் கூடியவர்களோ அல்லது அனுதாபம் தெரிவிக்கக்கூடியவர்களோ அல்லது அனுதாபம் தெரிவிக்கக் கூடியவர்களோ குடும்பத்தில் இருக்க மாட்டார்கள். இப்பெண் மணிகள் நற்பவழ மணியை அணிந்து கொண்டால் தம் தேகத்தில் இயற்கையான தடுப்பு சக்தியைப் பெருக்கிக் கொள்ளலாம்.
நீங்கள்யாருடனும் கூட்டு வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது. உங்களால் கூட்டாளிகளுக்கு லாபம் ஏற்படுமேயன்றி அவர்களால் உங்களுக்கு எந்தவித ஆதாயமும் ஏற்படாது. கூட்டாளிகளால் உங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும். எனவே சகல உரிமைகளையும் சொந்தப் பொறுப்பில் வைத்துக் கொண்டு சுயமாகப் பாடுபடுவது சிறந்ததாகும். அப்படி கூட்டாளிகளை சேர்த்துக்கொள்ள வேண்டுமானால் மேஷம், மிதுனம், கும்பம் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுடன் கூட்டு சேரலாம். சிம்மம், துலாம், தனுசு ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பர். ரிஷப, கடக, கன்னி, விருச்சிக, மகர, மீனம் முதலிய லக்னங்களில் பிறந்தவர்களால் உங்களுக்கு பாதகமேயன்றி நற்பலன்கள் ஏற்படா. பண விவகாரங்களில் கண்டிப்பான பேர்வழியாதலால் பிறருக்கு விட்டுக் கொடுப்பவர்களல்லர். நயமாகப் பேசுவதோ காக்காய் பிடிப்பதோ உங்களுக்கப் பிடிக்காது இந்த குணம் படைத்தவர்களையும் உங்களுக்குப் பிடிக்காது. யதார்த்த வாதி வெகுஜன விரோதிஎன்ற பழமொழி உங்களுக்கே தகும். நெருங்கிய உறவினர்களை விட நண்பர்களிடத்தில் தான் அதிக பாசமும் பற்றுதலும் நீடித்து இருக்கும்.
இவர்கள் நீண்ட ஆயுளைப் பெற்றவர்களாக இருப்பார்கள். சிறுவயதில் கண்டங்கள் ஏற்பட்டாலும் அதிசயிக்கத் தக்க விதத்தில் தப்பித்துக் கொள்வார்கள். ஆனாலும் வாழ்க்கையில் பல சோதனைகள், உடற்சோர்வுகள், விரும்பத்தகாக சம்பவங்கள் அடிக்கடி நேர்ந்து வரும். ஆகார விதியில் பத்தியமாத இருந்து வரின் இவர்களின் தேகாரோக்கியம் கெடாமலிருந்து வரும்.
நீங்கள் புதிய நவீன விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக நிறைய செலவிடுவர். கணிதம், ஜோதிடம், வான நூல், மருத்துவ ஆராய்ச்சி, தத்துவசாஸ்திரம், புதிய நாவல்கள், தர்க்கசாஸ்திரம், உணவுப் பொருள் ஆராய்ச்சி, தினசரி, வாராந்திர மாதாந்திர பத்திரிகைகள் வாங்குவதற்கு அதிகமாக செலவிடுவீர்கள். அடிக்கடி பிரயாணங்கள் செய்ய நேரிடுவதால் பிரயாண செலவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.
லாப நஷ்டக் கணக்குகளை நன்கு பரீசீலனை செய்த பின்னரே எந்த திட்டத்திலும் ஈடுபடுவார்கள். ஆதலால் நஷ்டம் ஏற்படக்கூடிய விவகாரங்களில் தலையிட மாட்டார்கள். லாபம் ஏற்படும் வழிகளிலும் அதிக முதலீடு செய்ய துணிவு ஏற்படாது. வாழ்க்கையில் பல வழிகளில் செலவுகள் ஏற்படும்போது அவற்றைச் சரிக்கட்ட திட்டம் தீட்டி சமாளிப்பார்கள்.
நீங்கள் தீவிர தெய்வபக்தியுடையவர்கள். பெரியவர்களிடத்திலும் ஆசிரியர்களிடத்திலும் மிகுந்த பணிவு கொண்டவர்கள். பழைய சம்பிரதாயங்களை மீற மாட்டீர்கள். தயாள குணமும், இரக்க சிந்தையும், பரோபகார குணமும், தாராளமனமும் கொண்ட நீங்கள் தங்களால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவி புரிந்திடுவார்கள். தம்மால் முடியாவிட்டாலும், உதவிபுரிபவர்களுக்கு சிபாரிசு செய்து உதவியளித்திடுவார்கள். இதனால் உங்களுக்கு அடிக்கடி செலவுகள் தான்ஏற்படும்.
உங்களுடைய தகப்பனாரும் நீண்ட ஆயுள்பெற்றவரே. ஆனால் தன்னிச்சைபோல் சுயேச்சையாக வாழ்நாளைக் கழித்திட போதுமான வருமானத்தைத் தேடிக்கொள்வர். உங்களுக்கு வேண்டிய அளவுக்கு பொருள் வசதியோ பணவசதியோ அளிக்காவிட்டாலும், உங்களுக்கு பாரமாக இருக்கமாட்டார்கள். உங்களுடைய தகப்பனார், தன் சொந்த சுகத்திற்காகவும் உறவினர்களை ஆதரிக்கவும் ஜாதகர்களின் கல்வி வளர்ச்சிக்கும் செலவு செய்துவிட்டு, உங்களுக்கு ஒன்றும் மிச்சம் வைக்காமல் இருப்பதும் உண்டு.
இந்த லக்ன ஜாதகர்களுக்கு அரசாங்க அல்லது அரசியல் தொடர்பு எந்த வகையிலும் இருந்தே தீரும் அரசாங்க உத்தியோகம் அமையும் அல்லது அரசாங்கத்துடன் காண்ட்ராக்ட் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வர். ஒரு சிலருக்கு போலீஸ் அல்லது இராணுவத்துறையில் வேலை கிடைக்கும். அல்லது இத்துறையில் உள்ளவர்களுடன் நட்பாவது, பழகும் சூழ்நிலையாவது ஏற்படும். ஒரு சிலர் பதிப்பாசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் அச்சுத் தொழில் போன்றவற்றில் ஈடுபடுவர். ஒரு சிலர் இரும்பு யந்திரம், சுழலும் கரணைகள், மின் சக்தியால் இயங்கும் தொழிற்சாலைகள், கலைகள் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் இவற்றில் ஈடுபட்டு நல்ல வருமானத்தைப் பெற்றிடுவர். உணவுப் பண்டங்கள், பால் வியாபாரம், காபி, டீ, ஓட்டல், உயர்ந்த ஜவுளி, வெண்ணிற வஸ்துகள் ஆகியவையும் சிலருக்குத் தொழிலாக அமையும்.
இவர்கள் உயர்ந்த அந்தஸ்தை வெகு சீக்கிரத்தில் அடைந்து, தன் உறவினர்களிடையே நல்ல செல்வாக்குடனும் கௌரவத்துடனும் விளங்குவர். தொழில்துறையில் மிக உயர்ந்த பதவிகளை பிறர் வியக்கத்தக்க அளவில் அடைந்து பேரும் புகழுடன் விளங்குவர். ஆயினும் தொழில் துறையிலும் இவருக்கு தாழ்வுகள் இருந்துகொண்டே இருக்கும்.
இன இந்த லக்னத்தில் பிறந்த மாதர்களின் பலன்களைப் பார்க்கலாம்.
இந்த லக்னத்தில் தோன்றிய நீங்கள் உருவத்தில் சிறியவராயினும் யாவரையும் எளிதில் கவர்ந்திடும் வசீகரத்தோற்றம் பெற்றவர்கள். எந்தக் காரியத்தையும் தங்களது பிடிவாத குணத்தினால் சாதித்துக் காட்டுவர். சுறுசுறுப்பான உங்களிடத்தில் சோம்பல் என்பதேயே காண்பதரிதாகும். எதையும் எளிதில் கிரகிக்கும் நுண்ணறிவு உடையவர்கள். கள்ளம் கபடமின்றி எல்லாருடனும் சரிசமமாகப் பழகும் திறந்த உள்ளம் படைத்தவர்களாயினும், படபடப்பாகப் பேசிடுவர். நியாயமானதைத் தயங்காமல் எடுத்துரைக்கும் நீங்கள் நியாயம் தவறுபவர்களைக் கண்டித்துப் பேசுவர். படாடோபமில்லாதவர்களும் ஆடம்பரத்தை வெறுப்பவர்களுமான நீங்கள் எளிய பொருள்களையே தேர்ந்தெடுப்பீர். உண்பதிலும் சிக்கன முறையையே கையாள்பவர்களாதலால் சிறிதளவே உண்பீர்கள். ஆனாலும் நேரம் தவறாது உண்பீர்கள். ஏழை பணக்காரர் என்ற பாகுபாடற்ற நீங்கள் நல்லவர்களிடத்தில்தான் சரளமாகப் பழகுவர். ஒழுக்கம், பண்பும் பூஷணமாகக் கொண்ட நீங்கள் சற்றும் ஏறுமாறாக நடப்பவர்களைக் கண்டால் ஒதுங்கி விடுவீர்.
உங்களுடைய விருப்பத்திறிகேற்றவாறு உங்கள் வாழ்க்கை அமையும். தாம்பத்திய வாழ்க்கையில் சிறு விவகாரங்கள் தோன்றி வாக்குவாதம் ஏற்படுமேயல்லாது மனவேற்றுமை அல்லது ஒற்றுமை குறைவோ ஏற்படாது.. மக்களை நல்ல முறையில் வளர்ப்பதிலும், அறிவு புகட்டுவதிலும் நீங்கள் மிக்க சாமர்த்திய சாலிகள்.
நீங்கள் நித்திரைப் பிரியர்கள். தூங்குவதற்கு உங்களுக்கு பாய்-படுக்கை ஒன்றும் தேவைப்படாது. உட்கார்ந்தபடியே எவ்வளவு நேரம் வேண்டுமானலும் தூங்குவீர்கள். நேரம் கழித்து தூங்கச் சென்றாலும், அதிகாலையில் எழுந்து விடுவீர். உட்கார்ந்து கொண்டே தூங்குவதில் சமர்த்தர்கள் ஆனதால் இரயில், பஸ்களிலும் பிரயாணம் செய்தாலும் உங்களுக்குத் தூக்கம் கெடுவதில்லை.

என்னில் உள்ளது